என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal entry"

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    11 நாடுகள் வழியே பயணித்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பின்னர் அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை செய்த இந்தியர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    வெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது.

    அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், ஒன்றரை வருடங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவை இலக்காக கொண்டு 2016-ம் ஆண்டு பிரேசில் சென்ற ஹர்பிரீத் சிங், அங்கிருந்து பொலீவியா சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரு நாட்டை அடைந்துள்ளார். பின் கொலம்பியா, பனாமா, கவுதமமாலா உள்ளிட்ட 11 நாடுகளை கடந்து இறுதியாக அமெரிக்க அண்டை நாடான மெக்ஸிகோவை எட்டியுள்ளார்.

    பின்னர், அங்கிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஹர்பிரீத் சிங் நுழைந்துள்ளார். அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை பார்த்த அவர் போலீசாரிடம் சிக்கி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    அமெரிக்காவை நோக்கிய ஹர்பிரீத் சிங்கின் பயணத்தின் போது அவரது பாஸ்போர்ட் திருடு போயுள்ளது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற முயன்றுள்ளார். இது தெரிய வந்த பின்னர் அந்த ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×