என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Import Tariffs"

    • அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
    • அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். முனனதாக கனடா, சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

    இவரது அறிவிப்பை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    30 பில்லியன் கனேடிய டாலர்களில் உள்ளவை வருகிற செவ்வாய் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதே தினத்தன்று, டிரம்பின் வரிகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மீதான வரிகள் 21 நாட்களில் அமலுக்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.

    ட்ரூடோவின் அறிவிப்பு, கனடா மற்றும் மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25% வரிகளும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரிகளும் விதிக்க டிரம்ப் உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது. இது உலகளாவிய வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். மேலும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    வரவிருக்கும் வாரங்கள் கனேடிய மக்களுக்கு கடினமாக இருக்கும் என்றும், ட்ரூடோவின் வரிகள் அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

    அமெரிக்க பீர், ஒயின் மற்றும் போர்பன், அத்துடன் டிரம்பின் சொந்த மாநிலமான புளோரிடாவில் இருந்து வரும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்று வரி விதிக்கப்படும் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதும் கனடா வரி விதிக்கும் என்று தெரிகிறது.

    கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் இருப்பதை விட கனேடிய பொருட்களை வாங்கி வீட்டிலேயே ஓய்வெடுக்க ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

    • கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    • விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

    அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.

    டிரம்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

    இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

    அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

    அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.

    நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.

    கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது.
    • பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.

    கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.

    இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது.

    சீனாவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது சீனாவும் மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

    அந்த வகையில் சீனாவின் 34 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி) மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 6-ந் தேதி கூடுதல் வரி விதித்தது. அதே அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.

    இந்த நிலையில் சீனாவின் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    25 சதவீத அளவிலான இந்த கூடுதல் வரி விதிப்பு, வரும் 23-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது. 
    ×