என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "including couple"
- மதுரையில் ரூ. 58 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). தனியார் வங்கி மேலாளர்.இவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது வங்கியில் விருமாண்டி, மனைவி ஆல்பின் ஸ்டெபி ஆகியோர் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக, ரூ. 17 லட்சத்து 94 ஆயிரம் கடன் வாங்கினர். அந்த பணத்தில் அவர்கள் நகையை திருப்பி விட்டனர்.
இருந்தபோதிலும் வங்கியில் கடனாக வாங்கிய ரூ.17 லட்சத்து 94 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை. போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 40 லட்சம் மோசடி
திருச்சி மாவட்டம் புத்தூர், ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்தவர் தங்கராஜன் (63). இவர் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தொழில் அபிவிருத்திக்காக என்னிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கினார்.
அதனை அவர் குறித்த காலத்தில் திருப்பி தரவில்லை. நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அவர் தர மறுத்து அவதூறாக பேசினார். போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்