என் மலர்
நீங்கள் தேடியது "India visit"
- 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார்.
- உஷாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கோதாவரிக்கும் செல்வார்கள்.
அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் அவர்கள் வந்த விமானம் 9.45 மணிக்கு தரை இறங்கியது. அரசு சார்பில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதைதான், பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தது.
துணை அதிபர் வான்சுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் உடன் வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் வான்சும், அவரது குடும்பத்தினரும் டெல்லியில் உள்ள நாரா யண் அக்ஷர்தாம் கோவி லுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் வழிபாடுகள் செய்தனர்.
இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இன்று காலை அவர் நாராயண் ஆலயத்தில் வழிபாடு முடித்ததும் டெல்லியில் உள்ள பாரம்ப ரிய இந்திய கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்துக்கு சென்றார். அங்கு விற்கப்படும் பாரம்ப ரிய பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இதையடுத்து டெல்லி மவுரியா நட்சத்திர ஓட்ட லுக்கு சென்று தங்கி ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகலில் அவரை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேசுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு பிரதமர் மோடியும், வான்சும் சந்தித்து பேசுவார்கள். அதே சமயத்தில் இரு நாட்டு குழுக்களும் சந்தித்து பேச்சு நடத்தும்.
அமெரிக்கா சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தலைமையிலான குழுவினர் இடம் பெறு வார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமை யில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
பேச்சுவார்த்தையின் போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறிப்பாக இருதரப்பு வர்த்தகம், வரி, ராணுவம், விண்வெளி ஆய்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் வான்சுக்கும், அமெரிக்க அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு முடிந்தவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தங்குவார். நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) வான்சும், அமெரிக்க அதிகாரிகளும் ஆக்ராவுக்கு செல்ல உள்ளனர். அங்கு தாஜ்மகாலை துணை ஜனாதிபதி வான்சும், குடும்பத்தினரும் கண்டுகழிக்க உள்ளனர்.
மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பும் வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார்.
- உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா இன்று இந்தியா வந்தடைந்தார்.
- டெல்லி வந்த டிமிட்ரோ குலேபா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில், டெல்லி வந்தடைந்த டிமிட்ரோ குலேபா ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தனது பயணத்தில் இந்திய வெளியுறவு மந்திரி மற்றும் பிறருடன் இருதரப்பு உறவுகள் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க உள்ளார்.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் அவர் வருகை தந்துள்ளார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#WATCH | Ukraine Foreign Minister Dmytro Kuleba pays homage to Mahatma Gandhi at Rajghat in Delhi. pic.twitter.com/n5EzCVns5C
— ANI (@ANI) March 28, 2024
- டெஸ்லா நிறுவன சி.இ.ஓ.வான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வருகிறார்.
- இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.
- ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.
- இரு நாடுகளிடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
புதுடெல்லி:
அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் உற்சாகமாக வரவேற்றார்.
இன்று மாலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுகிறார்.
நாளை காலை ஷேக் ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர். அதன்பின் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.
ஷேக் ஹசீனா இந்த மாதத்தில் இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Bangladesh PM Sheikh Hasina arrives in New Delhi on a State Visit to India
— ANI (@ANI) June 21, 2024
She was received by MoS External Affairs Kirti Vardhan Singh. pic.twitter.com/rMhPMci166
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
- பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி:
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். தூதரக அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும், பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கிறார்.
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்திய பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தேர்தலில் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் திசநாயக நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
புதுடெல்லி:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
அனுர குமார திசநாயகே இலங்கை அதிபராக பதவியேற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் நாளை இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது புத்த கயா செல்ல உள்ளார்.