என் மலர்
நீங்கள் தேடியது "Indian stock markets"
- 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
- இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது
2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.
குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.
டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708
என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301
பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246
எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424
கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355
முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.
ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
- ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
- நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.
தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.
2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.
ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.
இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.