என் மலர்
நீங்கள் தேடியது "INDvSL"
- முதல் டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
- மீதமுள்ள போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை:
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதல் போட்டியின் தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் உள்ளூர் வீரர் ராகுல் திரிபாதி, சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். 31 வயது நிரம்பிய இவர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை அடுத்து, ஆடவர் டி20 போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது மூத்த வீரர் ஆவார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனகா 56 ரன்கள் சேர்த்தார்.
- இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
துவக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் சேர்த்தது
- அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 51 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதேபோல் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர். கடைசி ஓவரில் 21 பந்துகள் தேவை என்ற நிலையில், அடித்து ஆட முற்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் கடைசி பந்தில் ஷிவம் மவியும் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் இந்தியா 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டி 7ம் தேதி நடக்கிறது.
- அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.
- மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
எந்த வடிவத்திலும் யாரும் நோ-பால் வீச விரும்புவதில்லை. அது குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் உங்களை காயப்படுத்தலாம்.
இந்த இளம் வீரர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்.
இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டியதிருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக ஆதரவளிக்கிறோம்.
மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் கற்று கொள்வது எளிதானதல்ல. அதிலிருந்து கற்று கொள்ள வேண்டும்.
நல்ல விஷயம் என்னவென்றால் ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
- இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
புனே:
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 2 விக்கெட் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு போல்ட் விக்கெட்டின் போது பெய்ல்ஸ் கீப்பரை தாண்டி விழுந்தது. இந்த விக்கெட்டின் வீடியோவை ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிவேகத்தில் பந்து வீசிய உம்ரான்...பல அடி தூரம் பறந்த பெய்ல்ஸ்#UmranMalik #INDvSL #IndianCricketTeam pic.twitter.com/SSW98P4AsF
— Maalai Malar தமிழ் (@maalaimalar) January 6, 2023
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒரே ஆட்டத்தில் அதிக நோ பால் வீசிய அணியாக இருந்த அயர்லாந்தை பின்னுக்கு தள்ளியது இந்திய அணி.
- நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது.
ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
- 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது.
- இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.
ராஜ்கோட்:
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.
- இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன
- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராஜ்கோட்:
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பனுகா ராஜபக்சேவுக்கு பதில் அவிஷ்கா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை கைப்பற்றப்போவது இந்தியாவா? இலங்கையா? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
இந்திய அணி சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்து நீண்ட காலம் ஆகிறது. இதனால் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.
- 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
- சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜ்கோட்:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ஷூப்மான் கில், ராகுல் திரிபாதி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷூப்மான் கல்லுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. ஷூப்மான் கில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா (4), தீபக் ஹூடா (4) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
- 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி உள்ளது
ராஜ்கோட்:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 137 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், தசுன் சனகா தலா 23 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் ௩ விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது.