என் மலர்
நீங்கள் தேடியது "interim ban"
- சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி வழங்கி இருக்க கூடாது.
- சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுதொடர்பான வாதத்தின்போது சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கிருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும், சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி வழங்கி இருக்க கூடாது என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் வாதம் செய்தார்.
மேலும், சிவில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணா பயபன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை 11-ந்தேதி உறுதி செய்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கு முடியும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், ஒரு வேளை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SC #Daswanth
மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.
தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.
இது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.

அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்கள் உடனே அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். #Tanjoretemple #SriSriRaviShankar

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டதும் டெண்டரை ரத்து செய்யாமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு குறித்த புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். மேலும் வழக்கு விசாரணையையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #TenderScam #EdappadiPalaniswami #DVAC
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் 2011-12-ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வதற்காக கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-2010, 2010-11ம் ஆண்டுகளுக்கான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக அனுப்பிய நோட்டீஸ்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ண வள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தும், இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.
என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.
ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.