என் மலர்
நீங்கள் தேடியது "IPL auction"
- ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
- ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.
ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.
சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.
ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.
- இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
- இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
மும்பை:
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
- 333 வீரர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 77 வீரர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.
- ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
2024 சீசனில் விளையாட தேவையான வீரர்களை எடுப்பதற்கான ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வீரர்களை ஏலம் எடுப்பார்கள்.
ஏலம் விடும் நபர் (தொகுப்பாளர்) இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். தன்னுடைய அசாத்திய திறமையால் வீரர்களின் ஏலத்தை சில சமயம் அதிகரிக்கக் கூட செய்வர். கடந்த அண்டு ஹக் எட்மேட்ஸ் ஏலத்தை தொகுத்து வழங்கினார்.
ஆனால் இந்த முறை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். ப்ரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் இவர்தான் தொகுதி வஙழகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் 333 பேர் வீரர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது. இதில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ஜடேஜா ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
- இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.
- டிராவிஸ் ஹெட், ரவீந்திர சச்சின் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
- மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச்- மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் ஐ.பி.எல். தேதி முடிவு செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கருதியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள். இதில் 30 இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது. 10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர். அஸ்வின் வீரர்கள் ஏலம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை விடுவித்துள்ளது. அவர் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.
ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட் ரூ.4 கோடி வரைதான் ஏலம் போவார் என்று கணித்துள்ளர். உமேஷ் யாதவுக்கு ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை கணித்துள்ளார்.
- ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.
10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.
- ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனது மனைவி எனக்கு சொல்லி விட்டார்.
- இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24¾ கோடிக்கு விலை போய் இருக்கிறார். 33 வயதான ஸ்டார்க் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட் (10 ஆட்டம்) கைப்பற்றி இருந்தார்.
ஏலம் குறித்து அவர் கூறுகையில், 'உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார்.
ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லி விட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்.-ல் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
- ஐபிஎல் ஏலத்தில் இது பெயர் கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்ததாக பஞ்சாப் அணி தெரிவித்தது.
- பின்னர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துக் கொண்டது.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு எடுத்து விட்டோம் என ப்ரீத்தி ஜிந்தா ஏலம் விடுபவரிடம் தெரிவித்தார். ஆனால் ஒரு வீரர் எடுக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், அவரை திரும்ப பெற முடியாது என ஏலம் விடுபவர் தெரிவித்தார்.

இதனால் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியில் தவறுதலாக எடுக்கப்பட்டு இடம் பிடித்தார். ஆனால் நேற்று கதாநாயகனாக மாறி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இனிமேல் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இவர் பெயர் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
- ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
- குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது.
- எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது.
கொல்கத்தா:
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்காளக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 5 முதல் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடியை கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக ரூ.50 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஏலத்துக்கு வந்தால் ஒரு வீரருக்கு 50 சதவீத சம்பளத்தை பயன்படுத்த முடியுமா? மற்ற 22 வீரர்களை எப்படி தேர்வு செய்ய இயலும்.
எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது. சிறந்த வீரர் சிறந்த கேப்டன் இருக்க வேண்டும். ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஒரே ஆசை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கேப்டன் கே.எல்.ராகுலை பொது வெளியில் சஞ்சீவ் கோயங்கா கண்டித்தார். அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நீடிக்க மாட்டார். ஆனால் அவர் அணியில் தொடர்ந்து இருப்பார்.
சமீபத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கே.எல். ராகுல் சந்தித்து கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
- 5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது.
- மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவை ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும்" என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
- துபாய் அல்லது சவுதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு.
- அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏலம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யவில்லை.
உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 லீக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) திகழ்ந்து வருகிறது. 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.
மெகா ஏலத்தை பொதுவமாக வெளிநாடுகளில் நடத்த பி.சி.சி.ஐ. விரும்புகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்றது. இந்த வருடம் லண்டன் (இங்கிலாந்து), துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்தது.
நவம்பர் மாதம் இறுதியில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் லண்டனில் (இங்கிலாந்து) குளிர்காலம் என்பதால் அதை பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.
துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். துபாயை விட சவுதி அரேபியாவில் செலவு அதிகம் எனக் கூறப்படுகிறது. 10 அணிகளும் ஒரு குழுவுடன் செல்லும். அவர்களுக்கு ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மீண்டும் துபாயில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த இடம் என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் ஆறு வீரர்களை (Right-To-Match option- உடன்) தக்கவைத்துக் கொள்ள முடியும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முதல் வீரரை 18 கோடி ரூபாய்க்கும், 2-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கும், 3-வது வீரருக்கு 11 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும். 4-வது வீரரை 18 கோடி ரூபாய்க்கு உள்ளேயும், 5-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கு உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும். uncapped வீரரை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொள்ளலாம்.