என் மலர்
நீங்கள் தேடியது "IPL"
- அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை.
- அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-
அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.
இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.
நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.
என்று பிளெமிங் கூறினார்.
- சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
- எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.
அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.
அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் குவித்தார்.
- நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல்போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஒரு நபருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கை ஓட்டுபவர் இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் 197 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாத 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பின்பு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட சென்னை அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.
- ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.
2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.
அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.
- ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.
- டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது.
இந்த ஆட்டத்தில் டோனி 9-வது வீரராக களம் இறங்கி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 30 ரன் எடுத்தார். அவர் முன்னதாக களம் இறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட ஆட வராதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று டெலிவிசன் வர்ணனையாளரும், சி.எஸ்.கே. முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்.சி.பி.க்கு எதிராக டோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இதைப் பார்க்கத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். அவர் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்து இருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.
டோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ருதுராஜ் அழுத்தத்தில் ஆடினார். சாம் கரணை 5-வதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7-வது வரிசையில் விளையாட வைக்கலாம்.
தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்று இருக்கலாம்.
இவ்வாறு வாட்சன் கூறினார்.
- பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
- பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.
இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.
கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.
- சென்னை அணிக்கு எதிராக ஜித்தேஷ் 12 ரன்கள் எடுத்தார்.
- சென்னை என்றவுடன் தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் என போட்டிக்கு முன்னர் ஜித்தேஷ் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது களத்தில் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆகி வெளியே செல்லும் போது தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் ஒலித்தது. இதனை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்து அவரை கிண்டலடித்து கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ஆர்சிபி எடுத்த வீடியோவில் சென்னை என்றால் உங்களுக்கு நியாபகம் வருவது என்ன என்று கேள்வி எழுப்பிய போது இந்த பாடல் தான் எனக்கு நியாபகம் வரும் என ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார்.
அதனால் தான் அவர் அவுட் ஆகி வரும் போது டிஜே இந்த பாடலை ஒலித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- சென்னையில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அஷ்வினுக்கு பிறகு தோனி 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
7 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நிலையில் சிவம் தூபே அவுட் ஆனதும் தோனி வராதது ஏன்? வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பே துளியும் இல்லாமல் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே விளையாடியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி வருவதற்கு முன்னதாகவே அஸ்வின் (8 பந்தில் 11 ரன்கள்), ஜடேஜா (19 பந்தில் 25 ரன்கள்) களமிறங்கினர். அவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக விளையாடவில்லை. 9-வது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்தில் 30 ரன்கள் குவித்தார்.
அவர்கள் இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருந்தால் அவர் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருப்பார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிஎஸ்கே அணி வெற்றிக்காக விளையாடவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் தீவிர ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. தோனி சிக்ஸ் அடித்ததே போதும் எனவும் அவர் ஆட்டத்தை பார்த்ததே சந்தோஷம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
- நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார்.
ஐபிஎல்லில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்:-
ரவீந்திர ஜடேஜா - 3001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்
ஆண்ட்ரே ரசல் - 2488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்
அக்சர் படேல் - 1675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்
சுனில் நரைன் - 1578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்
டுவைன் பிராவோ - 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்
- குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 244 ரன் இலக்கை தூரத்திய குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்த அந்த அணி 'இம்பேக்ட்' வீரர் விஜய்குமார் வைஷாக்கின் 'யார்க்கர்' பந்து வீச்சில் போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது தோல்விக்கு வழிவகுத்தது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (3 விக்கெட்) தவிர மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், ரபடா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் அதிக ரன் கசியவிடுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (31 ரன்), சூர்யகுமார் யாதவ் (29) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் உள்ளிட்ட மற்ற பவுலர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை.
கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் 3 முறை சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவர் களம் திரும்புவது அந்த அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும்.
முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு அல்லது கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷித் கான், கசிகோ ரபடா, முகமது சிராஜ்
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், சத்யநாராயணா ராஜூ.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.