என் மலர்
நீங்கள் தேடியது "IPL"
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 116 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி காக் 2 ரன்களும், நரைன் 5 ரன்களும், ரஹானே 17 ரன்களும், ரகுவன்ஷி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
- பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார்.
- கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிவருகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 22, ஷ்ரேயாஸ் 0 என ஒரே ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
- கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 2-ல் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய லாக்கி பெர்குசன், தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதான் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி முதலில் ரன்களை குவித்தாலும் அடுத்த சிறிது நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த நிலையில் தோனி, ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறவைத்தனர்.
இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி, பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்:-
1. எம்.எஸ்.தோனி -30
2. ரவீந்திர ஜடேஜா - 27
3. தினேஷ் கார்த்திக் -24
4. டேவிட் மில்லர் - 23
5. விராட் கோலி - 22
- லக்னோ அணிக்கு எதிராக ரஷீத் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.
- ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன்.
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை- லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஷேக் ரஷீத் அறிமுகமானார். இவர் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும்.
இந்நிலையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்றே நினைத்தேன். ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன். அடுத்தமுறை நிச்சயம் தவறை திருத்திக்கொள்வேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
என ரஷீத் கூறினார்.
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன.
- 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சபாப் 245 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு கைகொடுக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 8 பவுலர்களை பயன்படுத்தியும் ஐதராபாத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர். பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதத்துடன் 250 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (194 ரன்), பிரப்சிம்ரன் சிங், வதேரா பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென் வலு சேர்க்கிறார்கள். ஆனால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் இதுவரை ஜொலிக்கவில்லை. அவர்கள் பார்முக்கு வந்தால், பஞ்சாப் மேலும் வலிமையடையும்.
ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர், எதிர்பாராத திருப்பமாக அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. அதன் பிறகு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இப்போது தனது பழைய அணியை நேக்கு நேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது காயத்தால் பாதியில் வெளியேறிய பஞ்சாப்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் (4 ஆட்டத்தில் 5 விக்கெட்) காயத்தன்மை தீவிரமாக இருப்பதால் அனேகமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விலகுவது, பஞ்சாப்புக்கு சற்று பின்னடைவு தான்.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 103 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அணி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (204 ரன்), குயிடான் டி காக், சுனில் நரின், வெங்கடேஷ் அய்யரும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஆரோரா, ஹர்ஷித் ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றுள்ளன. அதனால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் அல்லது ஆரோன் ஹார்டி, மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், யாஷ் தாக்குர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, வருண் சக்ரவர்த்தி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார்.
- கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.
ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.
அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.
நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், டெல்லி-மும்பை போட்டி முடிந்த பின்பு ஜஸ்பிரித் பும்ராவும் கருண் நாயரும் சமாதானமாகி கட்டிப்பிடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது.
- பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்தார்.
ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று களமிறங்கி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது என டெல்லி அணி வீரர் கருண் நாயர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது.
மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது. நான் நன்றாக ஆடினேன். ஆனால், என்னுடைய அணி தோற்றுவிட்ட பிறகு, எனது இன்னிங்ஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை.
என கருண் நாயர் கூறினார்.
- லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார்.
- லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில் லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக அணியுடன் இடம்பெறவில்லை. அவர் பெங்களுருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மயங்க் நாளை லக்னோ அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இவர் அணியின் இடம்பெற்றால், ஆவேஸ் கான் நீக்கப்படலாம்.
- இந்த போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
- தீபக் சாஹர், போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கருண் நாயர் அதிரடியாக விளையாடினார்.
டெல்லி:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.
அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.
நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர். ரோகித் சர்மா இதையெல்லாம் ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.