என் மலர்
நீங்கள் தேடியது "Isaivani"
- கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.
இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், "முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
மேலும், திருமாவளவன் கூறியதாவது:-
மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் துஇருக்கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்கிற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணியக் குரலாக அந்த குரல், பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்து இருக்கிறதே தவிர அதில் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடியதாக இல்லை.
அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.
அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது. அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இதுபோன்ற சிறு பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல.
இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுவது பொறுத்தமானது அல்ல. அது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்:
ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
