search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail சிறுமி சில்மிஷம்"

    மின்வாரிய ஊழியர் ஒருவர், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவர், மரவனேரியில் உள்ள அரசு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெயராமன் நேற்று மாலையில் மளிகை கடைக்கு மிட்டாய் வாங்குவதற்காக சென்ற 6 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜெயராமனை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து ஜெயராமன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இன்று காலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக ஜெயராமனை வேனில் அழைத்துச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கனடாவில், முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
    கனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

    கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன்  (33).  இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய போது  தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

    அவர் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட போலீசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டாலர்கள் செலவு ஏற்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
    ×