என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jason Gillespie"

    • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
    • பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    • இங்கிலாந்து தொடரின்போது சில முடிவுகள் எடுக்க கில்லெஸ்பிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
    • துணை பயிற்சியாளரின் பதவிக்காலத்தை நீடிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் கில்லெஸ்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிவடைந்த உடன் வருகிற 26-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியுடன் துபாய் வழியாக கில்லெஸ்பி தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டும். ஆனால் கில்லெஸ்பி குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிகிறது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

    இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை இரண்டு வருடத்திற்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது. வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சில முடிவுகளை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கால அவகாசம் கொடுக்காததால் கில்லெஸ்பி அதிப்தி அடைந்துள்ளார். துணை பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக் காலத்தை நீடிக்காததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.

    • இவரது பயிற்சி காலத்தில் வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை இழந்தது பாகிஸ்தான்.
    • பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அக்யூப் ஜாவித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    தற்போது பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிந்ததும் வரும் 26-ம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லஸ்பி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை 2 ஆண்டுக்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது.

    இவரது பயிற்சி காலத்தில் வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.

    புதிய தலைமை பயிற்சியாளராக அக்யூப் ஜாவித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் சில மாதங்களுக்கு முன் விலகியது குறிப்பிடத்தக்கது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
    • கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

    பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

    மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.

    இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.

    ×