என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Jayendra Matric School"
- சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியின் 28-வது ஆண்டு விழா நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியின் 28-வது ஆண்டு விழா நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், துணைத்தலைவர் சங்கராதேவி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா கல்வி அறக்கட்டளையின் டிரஸ்டி சீதாராமன், பள்ளியின் தாளாளர் விஜயன் அருணகிரி, முதல்வர் ஞானமணி துரைச்சி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் சென்ற ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஷ்யாம் சுந்தர், 2-ம் மதிப்பெண் பெற்ற தனுசுயா மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பிரியங்கா, 2-வது மதிப்பெண் பெற்ற மாணவன் ஹரிஸிபம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி விளையாட்டு விழாவில் நடைபெற்ற விளையாட்டுகளில் இருந்து கிடைத்த ஒட்டுமொத்த புள்ளிகளில் முதல் இடத்தை பிடித்த நீல நிற அணி மற்றும் 2-வது இடத்தை பிடித்த பச்சை நிற அணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்பு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.