என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jordan"

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    அம்மான்:

    ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.



    ஜோர்டான் நாட்டின் பழமையான பாலைவன நகரமான பெட்ராவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர்களில் சென்று சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    ஜோர்டான் தலைநகர் அம்மானில் போலீசார் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    அம்மான்:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஜோர்டான். இதன் தலைநகர் அம்மான். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீசார் பலியானார்.

    இதையடுத்து, போலீசார் அம்மானில் உள்ள சால்ட் நகரில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதி, அங்கு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×