என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Josh Hazlewood"

    • முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்174 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் ஓவரை ஆர்சிபி அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார். ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

    • இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
    • ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து வீரர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
    • இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது.

    நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

    சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 -0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.

    அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

    இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறினார். 

    • ஹசில்வுட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
    • இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார்.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹசில்வுட் இன்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹசில்வுட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

    காயத்தால் அவதியுற்ற நிலையில், இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் சமீபத்தில் விலகியிருந்தார். இதுதவிர பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது காயமுற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகினார்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடுமையானதாக இருக்கும் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. வார்னர், ஸமித், பான்கிராப்ட் இல்லாத அந்த அணியை இந்தியா இந்த முறை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக வருகிற தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. எப்போதுமே கடுமையானதாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மண்ணில் அவர்களை துவம்சம் செய்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள்.



    எங்களது அணியில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் இல்லாததால் வீக்கான அணி என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறந்த அணியாக உருவெடுக்க முயற்சி செய்வோம். எங்களுடைய மண்ணில் விளையாடும்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தொடரிலேயே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

    தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதியில் 1-2 என தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மண்ணில் அவர்களை ஒருவழி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ×