என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Juventus"
- பெடரிகோ சீசாவின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு வரை உள்ளது.
- குறைவான சம்பளத்திற்கு சம்மதம் தெரிவித்தால் ஒப்பந்தத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கிளப் மான்செஸ்டர் யுனைடெட். அதேபோல் இத்தாலியின் செர்ரி ஏ லீக்கின் முன்னணி கிளப் யுவேன்டஸ்.
யுவேன்டஸ் அணியில் பெடரிகோ சீசா விளையாடி வருகிறார். தற்போது அவரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியில் உள்ள ஜடோன் சான்சோவை வாங்க யுவேன்டஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெடரிகோ சீசாவை வெளியேற்றுவதன் மூலம் சான்சோவை எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறது யுவேன்டஸ். ஆனால் இந்த பரிமாற்றம் டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஜிடோன் சான்சோ ஏற்கனவே டுரின் செல்ல இருப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மான்செஸ்டர் யுனைடெ் பயிற்சியாளர் எரிக் டென் ஹக் யோசனை செய்வார் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சீசா மீண்டும் யுவேன்டஸ் அணிக்கு திரும்பவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த டிரான்ஸ்பர் நிலை அவருடைய எதிர்காலத்தை நிச்சயமற்றதாக உருவாக்கிவிட்டது. அவருடைய ஒப்பந்தம் இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், யுவேன்டஸ் அவரை வெளியேற்றும் நிலைக்கு வந்துள்ளது.
நான்கு வருடத்திற்கு முன் சீசாவை பியோரென்டினா கிளப்பில் இருந்து 60 மில்லியன் யூரோவிற்கு யுவேன்டஸ் ஒப்பந்தம் செய்தது. அந்த அணியின் 11 பேர் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்தார். 131 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார்.
தற்போது குறைந்த சம்பளத்துடன் யுவேன்டஸ் அணியுடன் ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்று வாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து யுவேன்டஸ் அணியுடன் நீடிக்க வேண்டும்.
தற்போது வரை யுவேன்டஸ் அணியில் நீடிப்பது அல்லது வேறு அணிக்கு செல்வது குறித்து சீசா எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஜடோன் சன்சோ முதலில் மான்செஸ்டரின் திட்டத்தில் இல்லை. அந்த அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹக் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது எரிக் டென் ஹக் உடன் உள்ள கருத்து வேறுபாடு பேசி சரிசெய்துள்ளதால், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, லோன் அடிப்படையில் ஜெர்மனியின் புருஸ்சியா டார்ட்மண்ட் அணிக்கு சென்றார். அங்கு சிறப்பாக விளையாடி, 11 வருடத்தில் முதன்முறையாக UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியாக இருந்தார். ஆனால் அந்த அணியில் சான்சோவை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905161543185178_1_sanchez160502._L_styvpf.jpg)
இதனால் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளம் கொடுக்க வேண்டுமா? என்று மான்செஸ்டர் யுனைடெட் யோசித்து வந்தது. இந்நிலையில் இத்தாலி செர்ரி-ஏ லீக் அணிகளான யுவான்டஸ் மற்றும் இன்டர் மிலன் அணிகள் அவரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905071642176031_1_OleGunnar070501._L_styvpf.jpg)
முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
2018-19 சீசனுக்கான காலிறுதி ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், தங்களுடைய எதிரணியுடன் சொந்த மைதானம் மற்றும் எதிரி மைதானம் என தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.
ஒரு காலிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் (இத்தாலி) - அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஜாக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904171639165792_1_Ronaldo170401._L_styvpf.jpg)
2-வது லெக் யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 28-வது நிமிடத்தில் யுவான்டஸின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் பதில் கோல் அடித்தார். இதனால் 2-வது முதல் பாதி நேரம் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904171639165792_2_Ronaldo170403._L_styvpf.jpg)
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் கோல் அடிக்க அஜாக்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் யுவான்டஸ் அணி போராடியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அஜாக்ஸ் இரண்டு லெக்கிலும் சேர்த்து யுவான்டஸை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 54-வது நிமிடத்தில் யுவான்டஸ்க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக கோல் அடித்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810280912522907_1_Ronaldo2810001-s._L_styvpf.jpg)
அதன்பின் 70-வது நிமிடத்தில் அபாரமான வகையில் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 20 நிமிடங்களால் எம்போலி அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. இரண் கோல் அடித்து ரொனால்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810241558097651_1_Ronaldo1210002-s._L_styvpf.jpg)
ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
இந்த சீசனில் யுவான்டஸ் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவான்டஸ் கிளப் இயக்குனர் பராட்டிசி ரொனால்டோ குறித்து கூறுகையில் ‘‘எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத்தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810101722525456_1_juventus101018002-s._L_styvpf.jpg)
இதற்கிடையே யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக்கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வரவாய்ப்பில்லை என்றார். ரொனால்டோவை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல’’ என்றார்.
லா லிகா சீசனில் ரியல் மாட்ரிட் கடைசி மூன்று போட்டியில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
2-வது பாதி நேரத்தில் 49-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ பந்தை மின்னல் வேகத்தில் அடித்தார். நபோலி வீரர்களை தாண்டி கோல் கீப்பர் அருகில் சென்றது. அவர் பந்தை தடுக்க கோல் கம்பத்தில் பந்து பட்டு திரும்பியது. அதை மெண்ட்சுகிச் சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810011547450635_1_juventus6001-s._L_styvpf.jpg)
ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பந்து கார்னர் பகுதியில் இருந்து வர ரொனால்டோ தலையால் முட்டி கோல் எல்லையை நோக்கி தள்ளினார். ஆனால் நபோலி கோல் கீப்பர் பந்தை அபாரமாக தடுத்தார்.
ஆனால் பந்தை லியோனார்டோ பொனுச்சி கோலாக மாற்றினார். இதனால் யுவான்டஸ் 3-1 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்காவிடிலும் இரண்டு கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார். யுவான்டஸ் தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து முதல் இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் ஸ்பெயின் கிளப் அணியான வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார்.
இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார். எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடிய யுவான்டஸ் வெற்றி பெற்றது.
யுவான்டஸ் அணி அடுத்த போட்டியில் யங் பாய்ஸ் என்ற அணியையும், அதற்கடுத்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் எதிர்கொள்கிறது. ரொனால்டோ ரெட் கார்டு பெற்றதால் யங் பாய்ஸ் அணிக்கெதிராக விளையாட முடியாது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809272015292265_1_ronaldo00112-s._L_styvpf.jpg)
அதேவேளையில் இதுகுறித்து ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. விசாரணையில் அதிக போட்டியில் விளையாட தடைபோட்டால் முக்கியமான மான்செஸ்டர் போட்டியில் விளையாடாத நிலை ஏற்படும். ஆனால், ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை ஒரு போட்டியில் விளையாட மட்டுமே தடைவிதித்துள்ளது.
இதனால் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809201653219229_1_Ronaldo8001-s._L_styvpf.jpg)
முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.
எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809201653219229_2_Messi8001-s._L_styvpf.jpg)
2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
ரொனால்டோ ‘செரி ஏ’ சீசனில் யுவான்டஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் மூன்று போட்டிகளிலும் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
யுவான்டஸ் அணிக்காக கோல் கணக்கை தொடங்காத ரொனால்டோ, நேற்று 4-வது ஆட்டத்தில் சஸ்சுவோலா அணிக்கெதிராக களம் இறங்கினார்.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின் 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இதன்மூலம் யுவான்டஸ் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். அத்துடன் அல்லாமல் 65-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809171702302335_1_ronaldo00702-s._L_styvpf.jpg)
சஸ்சுவோலா அணியைச் சேர்ந்த கவுமா பாபகார் இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. தொடக்க கோல் அடித்ததுடன் அணியை வெற்றி பெறவும் வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது. நபோலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809041653477458_1_ronaldo001-s8._L_styvpf.jpg)
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809041653477458_2_ronaldo003-s._L_styvpf.jpg)
யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.