என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal haasan"

    • பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
    • கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

    'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

     

    இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மலையால சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை எம்புரான் பிடித்துள்ளது.

    இந்நிலையில் படத்தை குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதை பற்றி பகிர்ந்துள்ளார் மோகன்லால். அதில் அவர் " கமல்ஹாசன் என்னை அழைத்து படத்தின் டிரெய்லரை பார்த்தேன் மிக அற்புதமாக இருக்கிறது. படத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றியடையும். அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்" என கூறியுள்ளார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • சட்டசபை தேர்தல் குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்-சபை எம்.பி.யாக இருக்கும் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் இரட்டைவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்.

    இதற்காக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கும் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்குள் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    தேர்தலை எதிர்கொள் ளும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல், சினிமா என இரண்டிலும் கால் பதித்து வரும் கமல்ஹாசன் சட்ட சபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்தி ருக்கிறார்.

    இதற்கான ஆயத்த பணி களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். அதன்பிறகு பாராளுமன்ற, சட்ட சபை தேர்தலை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க சதவீத அளவுக்கு வாக்குகளை பெற்றாலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நீதி மையம் கட்சியின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்துவிட வேண்டும் என்பதிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி உள்ளார்.

    இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    • சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.

    அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.

    வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

    இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் பக்கம் திரும்பிய மணிரத்னம்.
    • மூன்று நிறுவனங்கள் தயாரிக்கும் கமல்ஹாசனின் 234ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

    கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன்.
    • தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் கட்சிக்காக சென்னையில் திருமண மண்டபம் கட்டி தருவேன் என்று உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன். சென்னையிலேயே இந்த திருமண மண்டபத்தை கட்டி தர என்னால் முடியும். இதுபோன்ற கட்சி கூட்டங்களை நாம் அங்கேயே நடத்திக் கொள்ளலாம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம். விரைவில் திருமண மண்டபம் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்குவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

    • கடந்த மாதங்களில் செய்யப்பட்ட களப்பணிகள் மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
    • ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீரமைக்கும் மாபெரும் மக்களின் பணியே நம்முடைய பணியும் கூட. அதையே சமூக கடமையாகவும் கருதுகிறேன் என்று கூறினார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    16-11-2022 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    அந்தவகையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களையும் சந்தித்து விட்ட நம்மால், இந்தமுறை சிறந்த அரசியல் வியூகம் வகுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், தேர்தல் வியூகம் குறித்து இன்னும் விரிவாக கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    கடந்த மாதங்களில் செய்யப்பட்ட களப்பணிகள் மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்த தலைவர், கட்சிக்கான பிரத்யேக பிரசார வாகனம் கூடிய விரைவில் ஒவ்வொரு தொகுதிக்கும் வந்து சேரும் என்றும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீரமைக்கும் மாபெரும் மக்களின் பணியே நம்முடைய பணியும் கூட. அதையே சமூக கடமையாகவும் கருதுகிறேன் என்று கூறினார்.

    மேலும், மாவட்ட செயலாளர்களாகிய நீங்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு பணியினை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கலைத்துறையில் தடைகள், தோல்விகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வென்றது போல, அரசியல் தடைகளையும், தோல்விகளையும் தகர்த்தெறிந்து வெற்றி அடைவேன் என்றும் தெரிவித்தார்.

    மேலும், இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், களப்பணிகளை அதிகப்படுத்தவும், தமிழக அரசியல் வரலாறு, களப்பணி வியூகங்கள், சட்ட அடிப்படை போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம்.
    • இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள 23 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் கூட்டி இருந்தார்.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினரை இப்போதே தயார் செய்வது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார்.

    அவர் பேசும் போது மாவட்டச் செயலாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். மற்ற கட்சிகளை விட தி.மு.க.தான் மக்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நமது கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதில் மாவட்டச் செயலாளர்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

    பொதுமக்கள் உங்களிடம் கோரிக்கைகளை சொல்லும் போதும் மனு கொடுக்கும் போதும் பொறுமையாக கேட்டு மனுவை வாங்குங்கள். எரிச்சல் படக்கூடாது.

    நாம் நடந்து கொள்ளும் விதம்தான் நம்மை உயர்த்தும். மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    அதற்கான பணிகளில் நீங்கள் இப்போதே இறங்க வேண்டும். தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக பணியாற்ற கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.

    கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்து கொள்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வலுவான கூட்டணியை அமைப்போம். அதை தேர்தல் சமயத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன்.

    மக்கள் மத்தியில் நமக்கு செல்வாக்கு உள்ளது. எனவே அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் அவ்வப்போது எடுத்துச் சொல்லுங்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை பார்க்கும் போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    இதில் தே.மு.தி.க. கட்சியையும், கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தி.முக. கூட்டணியில் சேர்க்க தலைவர் வியூகம் வகுத்து வருவதாக கூறினர்.

    விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாதான் தே.மு.தி.க. கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடன் இருப்பதாகவே கூறி வருகிறார்.

    எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பிரேமலதா நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.

    இதற்கு வலுசேர்க்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்து போட்டியிட்டால் தான் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் ஒரு சவாலாக அமையும். அதற்கு அக்கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற தூது விடும் என்ற நம்பிக்கையில் தி.மு.க. மேலிடம் உள்ளது.

    இதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேரும் என கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால்தான் அது சாத்தியப்படும் என்ற நிலையில் உள்ளனர்.

    எனவே தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாக தி.மு.கவினர் இப்போதே பேச தொடங்கி விட்டனர்.

    • பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
    • துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் உடன் இருந்தனர்.

    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் (பொருளாதாரம்) மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

    அப்போது துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் இப்போதில் இருந்தே தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
    • பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    சென்னை:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் நீடிக்குமா? இல்லை இடம் மாறி தேர்தலை சந்திக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    புதிய கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன், கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து விதமான தோல்விகளையும் சந்தித்து விட்டார். 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல், 2021-ல் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது.

    ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

    இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நெருக்கடி அந்த கட்சிக்கும், கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டினார்.

    இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெற முடியும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியிருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் இப்போதில் இருந்தே தீவிரமாக பணியாற்ற வேண்டும். கிராமப் புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும்.

    அதில் நிர்வாகிகளை நியமித்து மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நான் உள்பட அனைவருமே புயல் வேகத்தில் பணியாற்றிட வேண்டும்.

    மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை கட்சியின் செல்வாக்காக உயர்த்தும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    அதனை தான் பார்த்துக் கொள்வேன். நமது கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கினால்தான் நம்மால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்.

    கட்சி வலுவாக இருந்தால் தானே கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் நம்மால் கவனம் செலுத்த முடியும். இதனை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும். அடுத்த 1½ ஆண்டுகள் கடினமாக உழைத்தால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை உணர வேண்டும்.

    கட்சி வளர்ச்சியில் கூடுதல் வேகம் தேவை. தீவிர தொண்டர்களாக நீங்கள் பணியாற்ற வேண்டும். கட்சியை வளர்ப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு செயல்பட நானும் தயாராகவே உள்ளேன். நீங்கள் அழைக்கும் இடத்துக்கு எப்போதும் நான் வருவேன். சினிமா என்பது வருவாய்க்கானது. அரசியல் என்பது மக்களுக்கானது.

    எனவே கட்சியை நீங்கள் தான் வளர்த்து கொடுக்க வேண்டும். இதன்மூலமே எதிர்காலத்தில் நாம் வெற்றியை ருசிக்க முடியும்.

    இவ்வாறு கமல்ஹாசன் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதைதொடர்ந்து மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதியாக 39 பாராளுமன்ற தொகுதியிலும் பொறுப்பாளர்களை நியமிப்பது, தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பது, கமல்ஹாசனின் சுற்றுப்பயணத்தை திட்டமிடுவது, பொதுக்கூட்டங்களை எங்கெங்கு நடத்துவது என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இப்படி கட்சியை வலுப்படுத்த கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற்று விடவேண்டும் என்கிற முனைப்பில் வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறார்.

    இதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த அவர் கடந்த 4-ந்தேதி செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற் குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்டனர்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் நெருங்கிய நட்புடன் உள்ளார்.
    • டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கமல் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார்.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கமல்ஹாசன் நாளை இரவு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேல், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முரளி அப்பாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரெயில், விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றே புறப்பட்டு டெல்லி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற கமல்ஹாசன் விரும்புகிறார். இதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது. டெல்லியில் ராகுலுடன் நடைபயணத்தில் ஒன்றாக செல்லும் அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் நெருங்கிய நட்புடன் உள்ளார். டெல்லியில் அவரையும் கமல் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    • நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

    மதுரை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகம் அடைய செய்யவும் "பாரத் ஜோடா யாத்ரா" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்து தற்போது டெல்லியை நோக்கி சென்று வருகிறது.

    இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நாளை (24-ந் தேதி) டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் இந்தியாவின் மாற்றம் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தின் மாற்றம் நம்மவர் அழைக்கிறார், கை கோர்ப்போம், வலு சேர்ப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தலைவர் வியூகம் வகுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நாளை டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் எங்கள் தலைவரும் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருமா? என்ற பரபரப்பு நிலவி வரும் நிலையில் மதுரை நிர்வாகிகளின் இந்த பரபரப்பு போஸ்டர்கள் கூட்டணி கனவுகளை மேலும் எகிற வைத்துள்ளது.

    ×