என் மலர்
நீங்கள் தேடியது "Karamadai"
- காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
- நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்
காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
- ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி 8 முறை பயணிகள் மெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், காரமடை, தோலம்பாளையம், சிறுமுகை, வெள்ளியங்காடு, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக தினசரி சுமார் 2,000க்கும் அதிகமான பயணிகள் கோவைக்கு சென்று வருகின்றனர்.
இதன்படி இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. அவ்வாறு காரமடை ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.
அப்போது ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் குடிநீர் வசதி இல்லை.
இது மட்டுமல்லாமல் ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் ரயிலுக்காக வந்து காத்திருக்கும் சிறுவர்கள், முதல் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பல இடங்களில் நிழற்கூடைகள் இல்லாததால் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ெரயில் பயணிகள் ெரயில்வே நிர்வா கத்திலும் பலமுறை புகார் தெரி வித்தும் இது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது.
எனவே இது தொடர் பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காரமடை ரெயில் நிலை யத்தில் உடன டியாக கழி வறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டு மென ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், காரமடை ரெயில் நிலையத்தில் தினசரி ஏராளமான பயணிகள் ெரயிலுக்காக வந்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது ெரயில் பயணிகள் வசதிக்காக ெரயில் நிலையத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. அவசர தேவைக்கு செல்வதற்கு கழிவறைகள் வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
- ரூ. 10 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது.
- போலீசார் ஆள் கடத்த வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை புச்சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
மேலும் இவர் தனது நண்பர் முத்தையா என்பவருடன் சேர்ந்து பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அஜித், முத்தையாவிடம் ரூ. 10 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அவர் இதுவரை அந்த பணத்தை முத்தையாவிடம் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் அவர்களுக்க இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று முத்தையா தனது 3 நண்பர்களுடன் அஜித்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது முத்தையா அவர்கள் வந்த காரில் அஜித்தை அழைத்து சென்றார். அழைத்து சென்று 4 நாட்களாகியும் அஜித் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அஜித், முத்தையாவின் செல்போனில் இருந்து தனது தந்தை ராஜேந்திரனுக்கு அழைத்தார். அப்போது தான் வலுகட்டாயமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ேமலும் தனது வக்கீலுக்கு தான் பாதுகாப்பு இல்லாமல் இருக்கீறேன் என மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த தகவலை கேட்டு அஜித்தின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் ஆள் கடத்த வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வருகின்றனர். வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
காரமடை:
காரமடை அருகே கன்னார்பாளையத்தில் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் என 3 பேரும், பள்ளி விடுதியின் சுவர் ஏறிக்குதித்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்க வில்லை. இது குறித்து காரமடை போலீசில், பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
போலீசார் பள்ளியின்கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டனர். அப்போது கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கன்னார்ப்பாளையம் ரோட்டிலும், காரமடை மெயின் ரோட்டிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மூன்று மாணவர்கள், கோவை சென்ற தனியார் பஸ்ஸில் ஏறிச்சென்றது பதிவாகி இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேரும் அவரவர் வீடுகளுக்குபத்திரமாக வந்ததாக பெற்றோர் பள்ளிக்கு தகவல் அளித்தனர். விடுதியில் தங்க பிடிக்காமல் மாணவர்கள் வெளியேறி யதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி,விடுதிகளில் கேமராக்கள் முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள சூழலில், பல பள்ளிகள் பெயரளவில் கேமராக்களை வைத்துள்ளனர். இது பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- லேப்-டாப், 55 இன்ச் டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- காரமடையில் இருந்து ஊட்டி செல்ல முடிவு செய்தார்.
காரமடை :
கோவை காரமடை பெள்ளபாதி அடுத்த ஒட்டர்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வியாஷ் (வயது 31). இவர் துபாயில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
வியாஷ் துபாயில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார். பின்னர் காரமடையில் இருந்து ஊட்டி செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த லேப்-டாப், 55 இன்ச் டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீடு திரும்பிய வியாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த டி.வி, லேப்-டாப் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து வியாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகிறார்கள்.
- போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- குடிபோதையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த சுதன் (வயது 30) என்பவர் வசித்து வந்தார்.
அவர் மாணவியின் தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது சுதன் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வார்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வங்கிக்கு சென்று இருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். குடிபோ தையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
பின்னர் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
பெற்றோர் வந்ததும் மாணவி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 50). அ.தி.மு.க உறுப்பினர்.
இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்அ ப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் பத்ரசாமி (35) என்பவர் அங்கு வந்தார்.
அவரிடம் மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த பத்ரசாமி பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி குத்தினார்.
பலத்த காயம் அடைந்த மகேஷ் குமாருக்கு ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அவரது நண்பர்கள் மகேஷ் குமாரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகேஷ் குமார் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
- இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அங்கிருந்தவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயற்சி செய்தார்.
இதில் மகேஷ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
காரமடை :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்கள் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது.
அதே சமயத்தில் மார்க்கெட்டை தற்போது பஸ் நிலையமாக செயல்பட்டு வரும் இடத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது.நகராட்சியில் இந்த முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நகராட்சி தனது முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் திரும்ப பெறவில்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று காலை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் சரவணனின் கார் மீது மோதினர்.
- கவுன்சிலரை தாக்கிய மர்ம நபர்கள் 3 ேபரை போலீஸ் வலைவீசி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரமடை:
கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37).
இவர் காரமடையில் சொந்தமாக ெதாழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் சரவணனின் கார் மீது மோதினர். இதை பார்த்த அவர் காரை நிறுத்தி வெளியே வந்து அந்த வாலிபர்களிடம் மோதியது குறித்து தட்டி கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். 3 வாலிபர்களும் தாக்கியதில் சரவணனுக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனால் அவர் சிகிச்சைக்காக காரமடை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார்.
பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் சரவணன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் கவுன்சிலர் சரவணனை தாக்கிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியில் தாக்கினார்களா அல்லது அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
- வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை :
கோவை காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 55). டிரைவர். இவரது மனைவி சுசிலா (40). இவர்களுது மகன் கவுரி சங்கர் (12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ் (55). சம்பவத்தன்று இவரது பேரன் மோனிஷ் வீட்டின் அருகே சாலையில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மோனிஷ் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த மோனிஷ் தாத்தா நாகராஜ், அவரது மகன்கள் கார்த்திக் (34), பிரபாகரன் (30), நாகராஜூன் தம்பி கோவிந்தராஜ் (44), அவரது மகன் ஆகியோர் கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் சுசிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.மேலும் அவரது 12 வயது மகன் சங்கரை கல்லால் தாக்கினர்.
வீட்டில் இருந்த கர்ணனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சுசிலா காரமடை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று நாகராஜ், கர்ணன் மற்றும் சுசிலா தங்களது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை காரமடை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).
இன்று காலை காரமடை- மேட்டுப்பாளையம் இடையே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜேஷ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு பரமேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.