என் மலர்
நீங்கள் தேடியது "Karun Nair"
- இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜூன் 20-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய ஏ அணியில் கருண் நாயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் கருண் நாயர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.
- இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.
கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.
ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின.
- இதில் விதர்பா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றும் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மஹிபால் லாம்ரோர் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்தது. கார்த்திக் சர்மா அரை சதமடித்து 62 ரன்னும், ஷப்னம் கர்வால் அரை சதம் கடந்து 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.
கேப்டன் கருண் நாயர் அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது துருவ் ஷோரேவுக்கு வழங்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை.
- இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிகிறது. இந்த போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.
இந்த தொடருக்கான அணியை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களுடைய அணியை அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடி காட்டி வரும் கருண் நாயர், இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை. இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது. அதில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.
என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
- உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
- ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை.
மும்பை:
இந்திய அளவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் விதர்பா அணியை முதல் முறையாக இறுதி போட்டிக்கு கேப்டன் கருண் நாயர் அழைத்துச் சென்று இருக்கிறார். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ரன் குவித்து வரும் கருண் நாயரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இந்தத் தொடரின் கால் இறுதி போட்டியிலும் சதம் அடித்த கருண் நாயர், அரை இறுதி போட்டியில் விதர்பா அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் 44 பந்துகளில் 88 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான அந்த அரை இறுதி போட்டியில் விதர்பா அணி 50 ஓவர்களில் 380 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் விதர்பா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் கருண் நாயரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், கருண் நாயர் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து, அதிலும் ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை. இதுபோன்ற செயல்பாடுகள் எதைச்சையாக நடக்காது. ஆழ்ந்த கவனம் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியம். வலுவாக இருங்கள். உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
என்று சச்சின் கூறினார்.
- மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும்.
- என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுதான் நான் விஜய் ஹசாரே தொடரில் அசத்தலாக பேட்டிங் செய்ய காரணம். மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இவ்வாறு கருண் நாயர் கூறினார்.
- விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 6 போட்டிகளில் கருண் நாயர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மிக சிறப்பாக விலையை வரும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இந்நிலையில், கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.
- விஜய் ஹசாரே தொடரில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
விஜய் ஹசாரே தொடரில் மிக அற்புதமாக விளையாடிய கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அஜித் அகர்கர் கூறியது தொடர்பாக பேசிய கருண் நாயர், "சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் எனது பெயர் பரிசீலிக்கப்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்காக நான் நன்றி கூறி கொள்கிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அது மட்டும் தான் என் மனதில் உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்காக 2027 ஆம் ஆண்டில் கருண் நாயர் தனது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.33 என்ற சராசரியுடன் 374 ரன்கள் அடித்துள்ளார். அதில் 303 நாட் அவுட் என்ற ஒரு முச்சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்கள் விளாசினார்.
- ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடியவர் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியுள்ளார். இவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விதர்பா அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜய் ஹசாரே (50 ஓவர் போட்டி) தொடரில் 9 போட்டிகளில் ஐந்து சதம், ஒரு அரைசதத்துடன் 779 ரன்கள் விளாசினர். இதனால் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடம் கிடைக்கவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேரளாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார். இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மொத்தம் 860 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதம் அடங்கும். மொத்தம் இந்த சீசனில் 9 சதங்கள் அடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு சிறப்பாக விளையாடும் உங்களுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கருண் நாயர் பதல் அளித்து கூறியதாவது:-
இந்த கேள்வியை கேட்பதற்கு நான் சரியான நபர் கிடையாது. இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது. நான் சொல்வது எல்லாம், ஒவ்வொரு போட்டியிலும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என பார்க்கிறேன். அது நடைபெற்றால் (இந்திய அணியில் தேர்வு செய்தால்) அது நடக்கும். என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்ய வேண்டும். அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு கருண் நாயர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.
கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.
தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மூன்று மாதங்களான ஒரு வீரரை பெஞ்ச் வைத்து விட்டு அதன்பின் அணியில் தேர்வு செய்யாதது மிகவும் மோசமானது. இது வினோதமாக உள்ளது.

அவர்கள் தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள், அதற்கான அளவுகோல் என்ன போன்றவற்றின் தேர்வுக்குழுவின் சிந்தனையை பற்றி புரிந்து கொள்வது வேதனையளிக்கிறது.
ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருப்பதாக அறிகிறேன். சில வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில வீரர்கள் திறமையை காண்பிக்க தவறிவிட்டால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இது நியாயமானது அல்ல’’ என்றார்.
ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.
அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.