என் மலர்
நீங்கள் தேடியது "kashmir attack"
- துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது.
- பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது.
நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேபாளம் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது மற்றும் எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை சரிபார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேபாளம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. முஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.
முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.
தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan


புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த 26-ந்தேதி குண்டு வீசி அழித்தது.
இந்த சூழ்நிலையில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கவாதியாக அறிவிக்ககோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தன.
10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது.
எந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கெடு நேரம் முடியும் தருவாயில் சீனா தொழில் நுட்ப ரீதியில் சில கேள்விகளை முன் வைத்து தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டது.
மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.
இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-
பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.
மோடியின் சீன தூதரக கொள்கை என்பது:
1. குஜராத்தில் ஜின் பிங்குடன் ஊஞ்சலாடினர்.
2. டெல்லியில் ஜின்பிங்கை கட்டி அணைத்தார்.
3. சீனாவில் ஜின் பிங்குக்கு தலை குனிந்து வணங்கினார்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து விட்டது. இதுகுறித்து ஒவ்வொரு இந்தியர் மனதிலும் கேள்வி எழுகிறது. அப்படியென்றால் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடியதில் என்ன பயன் இருக்கிறது.
கொடூரமான, ரத்தத்தை உறைய வைக்கும் கொலைகளை நடத்திய பயங்கரவாதி பா.ஜனதாவால் மீண்டும் தப்பி இருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack
கடலூர்:
காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பயங்ரவாதிகள் தாக்குதலில் 40-க் கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு ரோந்து கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு வந்தது. அதில் கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். கடலூர் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் அவர்களை வரவேற்றனர். இந்த கப்பலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கடலூருக்கு வந்த இந்த கப்பல் தண்ணீரிலும் மற்றும் தரையிலும் செல்லக் கூடியது ஆகும். இந்த கப்பல் மூலம் கடற்கரை மற்றும் கடற்கரை ஓரமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைப் பகுதியில் கடற்படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாவது சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனமாக கேட்டறிந்த ராஜ்நாத் சிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #OmarmeetsRajnath #safetyofKashmiristudents #Kashmiristudents #PulwamaAttack

அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். #PulwamaAttack #KumbhMela
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசார் 3 தரப்பினரும் இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirAttack #Bandipora
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் வாகனங்கள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகல் மட்டான் பகுதியில் பாம்ஸூ கிராமத்தின் அருகே பாதுகாப்பு வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு சில பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கான்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த காட்டுக்குள் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டின் நடுப்பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கு நடந்துவரும் துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த இரு வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கான்டி வனப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Kupwaraencounter #Soldiermartyred