என் மலர்
நீங்கள் தேடியது "Kasturi"
- தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
- இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.
அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.

கஸ்தூரி
இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில், "வட நாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2023
- அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி -மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், "முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.
கஸ்தூரியின் latest பழமொழிகள் இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்று பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி பதிவு
மேலும் மற்றொரு பதிவில், "செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம். இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பலவீனமான இதயம் உள்ளது. சிறைச்சாலைகளில் இதயத்திற்கு என சிறப்பு சிகிச்சை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காவலர்கள் CPU இல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஜீப்பிற்கு பதிலாக, ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.
#senthilbalaji எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம்.
— Kasturi (@KasthuriShankar) June 13, 2023
Indian politicians have the weakest hearts. Every prison must build cardiac care unit. Cops must be trained in CPU . Instead of police Jeep, better to use ambulance. ? pic.twitter.com/01ukALO1G5
- நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
- இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது.
- ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?
நடிகை திரிஷாக்கு ஆதரவு நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத விஷயத்தை பார்த்தமாதிரி எப்படி பேசலாம். ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
My video statement on AV Raju's shocking slander on Trisha, Karunaas and actresses in general. @trishtrashers @karunaasethu
— Kasturi (@KasthuriShankar) February 20, 2024
I believe a swift and strong reaction is warranted from the affected parties. https://t.co/CYBMItalEV
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
- இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரி பதிவு
இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி - நயன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்" என்று பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.
Spoiling the most beautiful moments of someone's life must be punishable under the law first . Legal theriyum medical theriyumnu sila worthless clowns interview kudukrathum tweet podrathum . Thirunthavemattanga. God is watching and knows to give Who what .
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 11, 2022
- நடிகர் கமல் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது என்று கூறியுள்ளார்.
- இதற்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்" என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

கமல்ஹாசன்
இது தொடர்பாக கமல் கூறியதாவது, ""ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்" என்று கூறினார். இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கஸ்தூரி
அதில், "கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் ஒரு encyclopedia . அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து கொள்வது வருத்தம் .
— Kasturi Shankar (@KasthuriShankar) October 6, 2022
ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை.அந்த காலத்தில் homo sapiens என்ற பேரே இல்லை.
so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?
கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு கடந்த 2நாட்களாக நேரில் சென்று நிவாரணப் பெருட்களை கொடுத்து வந்தேன். முத்துப்பேட்டை, மன்னார்குடி , தில்லை வளாகம், உள்ளிட்ட பகுதிகளிலும் நாகப்பட்டினத்தில் சாலையோர முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும் என்னால் முடிந்த பொருட்களை கொடுத்து உள்ளேன்.
மக்கள் அனைத்தையும் இழந்து தெருக்களில் தனித்தனியாக நிற்கின்றனர். இந்த நிலையிலும் நிவாரணப்பொருட்கள் பெறுவதிலும் வேறுபாடுகள் இருக்கிறது. இறுதியாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று அடைகிறது. சாலையில் சுலபமாக செல்லக்கூடிய இடங்களில் மட்டும் சென்று நிவாரண பொருட்களை கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் இன்னும் வாகன வசதி இல்லாத இடங்களுக்கும் சென்று பொருட்களை வழங்க வேண்டும்.
டெல்டாவில் நிறைய கிராமங்களுக்கு இதுவரையில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிராமங்கள் கேட்பாரற்று கிடக்கிறது.

டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கியது தவறு. அப்படியானால் வைரமுத்து குற்றவாளியா? என தாங்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மயியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்து உள்ளேன்.
நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்கு பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து. ஆசை, அரசியல், குறிக்கோள் என்று எனக்கு எதுவும் இல்லை. இன்றைய அரசு அனைத்தையும் சரியாக செய்து விட்டால் நாம் அனைவரும் வீட்டில் அமைதியாக டி.வி. பார்த்து கொண்டு இருப்போம். அரசு சற்று மெதுவாக இயங்குவதினால் வேகமாக இருக்கும் சிலர் வெளியில் தெரிகிறார்கள். இந்த அரசுக்கு கட்டுப்பட்ட சாதாரன தமிழச்சியாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Kasturi
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?
— Kasturi Shankar (@KasthuriShankar) September 6, 2018
தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். #MemeKast#Rajinipic.twitter.com/YZooptu8Wh
வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் ! #VadaChennaiTeaser@VetriMaaran@dhanushkraja@LycaProductions@aditi1231
— Kasturi Shankar (@KasthuriShankar) July 28, 2018
