என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kathmandu"

    • போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
    • காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.

    இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.

    ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார். 

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
    • நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

    இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.

    காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

    பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

    மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.

    நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.


    தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • ஜன்னல்கள், கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது தவளகிரி மலைப்பகுதி. இதையொட்டி அமைந்த ஒரு கிராமம் தான், 'சங்கு. திருமாலின் கரத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருச்சங்கின் பெயரில் அமைந்த இந்த கிராமத்தில், 'சங்குநாராயணர் கோவில்' என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு ஆலயமும் அமைந்திருக்கிறது. நேபாளத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயம் நேபாள நாட்டின் பவுத்த கட்டிடக் கலை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கி.மு.325-ம் ஆண்டு, லிச்சாவி வம்ச மன்னன் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், கி.பி. 496-ம் ஆண்டு முதல் கி.பி.524-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மகாதேவன் என்ற மன்னனின் படையெடுப்புகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கி.பி.1585 முதல் 1614-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்லன் என்ற அரசனின் பட்டத்து அரசியான கங்கா ராணி என்பவர். இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.

    இந்த கோவிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் அனைத்தும் தங்கம் கலந்த செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதனை கி.பி.1708-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த பாஸ்கர மல்லர் என்ற மன்னன் செய்திருக்கிறான். கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த ஆலயம், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையானது என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் திருமாலுக்கு உரிய சிற்பங்கள் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முதன்மை கோவிலின் பிரகாரத்தில் சிவன், கிருஷ்ணர், சின்ன மஸ்தா ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. அந்த சன்னிதிகளின் வாசல்களின் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான சிற்பங்கள் இந்த ஆலயத்தின் கூரையை தாங்கியபடி அமைந்துள்ளது. மேற்கு வாசலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவற்றின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த துண் கி.மு.464-ம் ஆண்டு லிச்சாவி இன மன்னன் மனதேவன் என்பவரால் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சில முக்கிய சிற்பங்கள் போற்றுதலுக்குரியதாக உள்ளன.

    அவற்றில் திருமாலின் வாகனமான கருடனின் சிற்பமும் ஒன்று. இது தவிர கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் 7-ம் நூற்றாண்டு சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. இந்த தெய்வத்தை 'சந்திர நாராயணர்' என்று அழைக் கிறார்கள்.

    மேலும் கலைநயத்துடன் அமைந்த விஷ்ணு, லட்சுமி மற்றும் கருடன் சிற்பங்கள், சின்ன மஸ்தா என்ற தேவி, தன்னுடைய தலையை தானே கொய்து, பசித்திருக்கும் டாகினி மற்றும் வார்னீ என்ற யட்சிகளுக்கு ரத்தம் வழங்குதல், அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபசரிக்கும் கண்ணனின் விஸ்வரூபக் காட்சி, இரணியகசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காத்த நரசிம்மர் ஆகியோரது சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் அமைந்த சிவன் கோவிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஏகாதசி, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழாவாக. சங்கு நாராயணர் யாத்திரை திருவிழாவும், மகாஷானன் திருவிழாவும் உள்ளன.

    அமைவிடம்

    காத்மாண்டு நகரத்தில் கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரின் வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும் சங்குநாராயணர் கோவில் அமைந்துள்ளது.

    • வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு.
    • 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களை 'திவ்ய தேசங்கள்' என்று அழைப்பார்கள். அந்த திவ்ய தேசங்களில் ஒன்றுதான், நேபாளத்தில் உள்ள 'முக்திநாத்'.

    உண்மையில் முக்திநாத் என்பது ஒரு சிறிய கிராமம் தான். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை சுற்றி சாலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்த ஆலயம் 'சாளக்கிராம ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.


    இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இருக்கும் ஆலயம் இது. இங்கே அருளும் நாராயணர், சுயம்பு மூர்த்தியாக உருவானவர் ஆவார்.

    நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் முக்திநாத் ஷேத்திரம் அமைந்துள்ளது.

    இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் 12 பாடல்களால், மங்களாசாசனம் செய்துள்ளனர். முக்திநாத் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கோவிலை 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

    இதற்கு மேல் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, தாமோதர குண்ட் (நீர்த்தேக்கம்). இதைத்தான் உள்ளூர் மக்கள் 'முக்திநாதர் ஆலயம்' என்கிறார்கள்.

    முக்திநாத் கோவில் பல அற்புதங்கள் நிறைந்தது. இங்கே சிறிய சன்னிதி, நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் சிறிய யாகசாலையும் உண்டு. கோவிலின் உட்புறம் முக்தி நாராயணர், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    மிகப்பழமையான நூல்களில், இந்த ஆலய இறைவன் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் கூட இதை உறுதி செய்கிறார். கால மாற்றத்தில்தான், இறைவன் அமர்ந்த கோல தோற்றத்திற்கு மாறியிருக்க வேண்டும்.

    தவிர இந்த ஆலயத்தில் கருடன், சந்தோஷமாதா, லலிதா, விநாயகர், சாளக்கிராம ரூபங்கள், பார்வதி பரமேஸ்வரன் ஆகியோரும் சிறிய விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்கள்.


    இந்த கோவிலில் அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. சிறு மணியை பிரார்த்தனையாக கட்டும் வழக்கம் மட்டும் உள்ளது. லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு உண்டு. இங்குள்ள சிறிய யாகசாலையில் எப்பொழுதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். அதில் நாமே ஹோமம் செய்துகொள்ளலாம்.

    கருவறையில் உள்ள இறைவனுக்கு நம் ஊரில் நடப்பது போல அபிஷேகம் செய்வது கிடையாது. செப்பு தட்டில் ஐந்து கிண்ணங்கள் இருக்கும். அதில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்றவை இருக்கும். அவற்றை ஒரு துணியில் தொட்டு, முக்திநாதரை துடைப்பார்கள். அதுதான் அங்கே அபிஷேகம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து இந்த தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாவ புண்ணிய தீர்த்தங்கள் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.


    மேற்கண்ட அனைத்து தீர்த்தங்களிலும் நவம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் கடுமையான குளிர் காரணமாக நீராட சிரமமாக இருக்கும்.

    பனி சூழ்ந்த உயரமான மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், அற்புதமான அனுபவங்களை கட்டாயம் கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முறை நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

    இந்த ஆலயத்திற்கு சென்று திரும்புபவர்கள், காட்மாண்டு சென்று அங்கும் பல ஆலயங்களை தரிசிக்கலாம். மேலும் இங்கு சாளக்கிராமம் வாங்கிக்கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்து பூஜிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    சாளக்கிராம அபிஷேக தீர்த்தமானது, கங்கை நீருக்கு சமம் என்பார்கள். மேலும் சாளக்கிராமத்தை துளசி கொண்டு பூஜிப்பவர்களின் இல்லங்களில் நரக பயம் இருக்காது.

    செல்லும் வழி

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அல்லது விமானத்தின் மூலம் கோரக்பூர் சென்று, கோரக்பூரில் இருந்து டாக்சி மூலம் சுனோலி எல்லையை அடைய வேண்டும். சுனோலி எல்லையை ஐந்து நிமிடம் நடந்து கடக்கலாம். அந்த இடத்திற்கு 'பைரவா' என்று பெயர்.

    அங்கிருந்து விமானத்தின் மூலம் அல்லது பஸ் அல்லது வேறு வாகனத்தின் மூலமும் போக்ரா என்ற இடத்தை அடையலாம். போக்ராவில் ஒரு நாள் தங்க வேண்டியதிருக்கும். போக்ராவில் இருந்து முக்திநாத் செல்ல அனுமதி வாங்க வேண்டும்.

    போக்ராவில் இருந்து ஜேம்சன் என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். முக்திநாத்தில் இருந்து கோவிலை அடைய நடந்து அல்லது குதிரையில் செல்ல வேண்டும்.

    108 திவ்ய தேசங்கள்

    வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு. அவற்றில் 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன. 'திருப்பாற்கடல்', 'வைகுண்டம்' ஆகிய இரண்டு திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் வானுலகில்தான் வாய்க்கும்.

    பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களில் 105 இந்தியாவிலும், நேபாளத்தில் ஒன்றும் அமைந்துள்ளன. நேபாளத்தில் அமைந்த திவ்ய தேசம்தான் 'முக்திநாத்' ஆகும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களின் தொகுப்பே '108 திவ்ய தேசங்கள்'. மங்களாசாசனம் என்பது, திருமாலையும் அவர் இருந்து ஆட்சி செய்யும் தலங்களையும் பாடிய பாடல்களை குறிக்கும்.

    108 திவ்ய தேசங்களையும் தொகுத்துக் காட்டியவர், அழகிய மணவாளதாசர் என்பவர் ஆவார். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில், அலுவலராகப் பணியாற்றியவர். 108 ஆலயங்களையும், நாடு வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அவை 'நூற்றெட்டு திருப்பதி அந்தாதி' என்று அழைக்கப்படுகிறது.

    • ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
    • அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.

    நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.

    நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.

    • காத்மாண்டு பகுதியில் காலராவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவுக்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு.

    காத்மாண்டு:

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் எட்டு பேர் குணமடைந்த  வீடு திரும்பினர். மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi
    புதுடெல்லி:

    வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi

    நேபாளம் நாட்டில் இருநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை புதுடெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    காத்மாண்டு:

    இருநாள் அரசு முறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.

    இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.

    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.


    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவின்போது அவரை கவுரவிக்கும் வகையில் காத்மாண்டு நகரின் சாவியை மேயர் பிட்யா சுந்தர் ஷாக்கியா அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யுத்தப் பாதையில் இருந்து புத்தப் பாதைக்கு திரும்பிய நேபளத்தின் சிறப்பை பாராட்டி பேசினார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் வளர்ச்சிக்கு மலையேற்றக்குழு வழிகாட்டி போல் நின்று உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியின்போது 55 கிலோ எடையிலான புத்தர் சிலை உள்பட அவருக்கு பல்வேறு நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டன. பின்னர், அனைவரிடம் இருந்தும் விடைபெற்ற பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #ModiInNepal
    காத்மாண்டு:

    நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

    விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் சர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி. அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு இயக்கப்படும் நேரடி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    இதனை அடுத்து, அந்நாட்டு அதிபர் பந்தாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட உள்ள நீர் மின்நிலைய திட்டங்களுக்கு மோடி மற்றும் சர்மா ஒலி இணைந்து அடிக்கல் நாட்டினர். #ModiInNepal
    ×