search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaviaruvi"

    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர்.
    • கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    சுற்றுலா தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    இதன் அருகேயே ஆழியார் அணை, அணை பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர். பின்னர் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்து செல்கிறார்கள்.

    கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. மழை குறைந்து விட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

    தற்போது அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கவியருவியில் தண்ணீர் குறைந்ததால், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கவியருக்கு வந்தனர். ஆனால் குளிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
    • ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கவியருவி உள்ளது. இங்கு ஆண்டின் ஒருசில மாதங்களில் தண்ணீர் ரம்மியமாக கொட்டும். அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வர்.

    இந்தநிலையில் ஆனைமலை வனப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே அருவிக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதன்காரணமாக கவியருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

    எனவே ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் தற்போது தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கவியருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்து உள்ளதால், அங்கு குளிப்பதற்காக ஆர்வமாக திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே கவியருவியில் குளிக்க தடை விதித்து உள்ளோம். வனப்பகுதியில் கனமழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×