என் மலர்
நீங்கள் தேடியது "Kerala win"
- முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கொச்சி:
ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.