search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "king cup league"

    • பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
    • ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.

    கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.

    முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×