என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiren Rijiju"

    • 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.

    நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மதியம் தொடங்கிய விவாதம், நள்ளிரவு வரை நடைபெற்று அதன்பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அதேபோன்று மாநிலங்களவையிலும் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. நேற்று 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றதாக சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிண் ரிஜிஜு கூறியதாவது:-

    நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமாக சாதனைப் படைத்துள்ளோம். 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த மசோதாவிற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்தன.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    இந்நிலையில், மாநிலங்களவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:

    வக்பு மசோதாவால் நாங்கள் முஸ்லிம்களை பயமுறுத்தவில்லை, அது எதிர்க்கட்சிகள்.

    வக்பு திருத்த மசோதாவில் மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்.

    வக்பு திருத்த மசோதா முதலில் வரைவு செய்யப்பட்டபோதும், இப்போது நாம் நிறைவேற்றும் மசோதாவிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. யாருடைய பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்கவில்லை என்றால் மசோதா முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

    வக்பு வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஏன் முஸ்லிம்கள் மட்டுமே சட்டப்பூர்வ அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தகராறு இருந்தால், அந்த தகராறு எவ்வாறு தீர்க்கப்படும்?

    வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் தகராறுகள் இருக்கலாம். சட்டப்பூர்வ அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
    • திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார்.

    தாக்கல் செய்து கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    * வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தனர். இன்று 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன.

    * முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே வக்பு மசோதாவின் நோக்கமாகும்.

    * நாங்கள் யாருடைய மத உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை.

    * வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.

    * திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    * வக்பு மசோதா கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்களுக்கு பயனளிக்கும், வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

    இவ்வாறு கிரிண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சிலர் கூறினர்.
    • ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை. பெரும்பான்மையினர் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

    பார்சிகள் போன்ற சிறிய சிறுபான்மை சமூகங்கள் கூட இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இங்குள்ள அனைத்து சிறுபான்மையினரும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.

    இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது.

    சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையுடன் வாழ்கிறோம்.

    வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்வது மிக, மிக தவறு.

    வரும் தலைமுறை உங்களை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பெரும்பான்மையினர் முழுமையாக மதச்சார்பற்றவர்கள் என்பதால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இது இல்லை. ஆனாலும், நீங்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் ஒன்றிணைக்கப் போகிறது. வக்பு தீர்ப்பாயங்களில் ஏராளமான தகராறுகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தின் மூலம் இந்த வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    • வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை.
    • 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

    வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. ஒடிசா மாநிலம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கும். எங்களுடைய கோரிக்கைகள் பாராளுமன்ற கூட்டுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இனிமேல் வக்ஃபு மசோதா, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (Unified Waqf Management Empowerment, Efficiency and Development- UMEED) மசோதா என மறுபெயரிடப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    மேலும், மக்களவையில் பேசும்போது "வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை. 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்; நீங்கள் எவ்வளவு காலம் அவர்களை தவறாக வழிநடத்த விரும்புகிறீர்கள்?.

    வக்ஃப் மசோதாவை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் நாடு பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில்தான் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தனியார் இயல்புடையவை, ரயில்வே, ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது" என்றார்.

    • வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும் தலையிடவில்லை.
    • 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர்

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்

    நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்பதை இரு அவைகளின் கூட்டுக் குழுவிலும் கூற விரும்புகிறேன். கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இதுவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர். 25 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்களும் தங்கள் சமர்ப்பிப்புகளை முன்வைத்துள்ளன.

    இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் இந்த மசோதாவை ஆதரிப்பார்கள்.

    நாடாளுமன்ற கட்டிடம் உட்பட பல இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று டெல்லி வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    இன்று இந்த சட்ட திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்பு சொத்து என்று உரிமை கோரப்பட்டிருக்கும்.

    2013 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகள் ஆகியோர் வக்பு போர்டில் இருக்க அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.

    2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்த 123 பிரதான சொத்துக்களை காங்கிரஸ் அரசாங்கம் டெல்லி வக்பு வாரியத்திற்கு அதற்காக மாற்றியது? இது தேர்தலில் வெற்றி பெற உதவும் என நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் தோல்வி தான் உங்களுக்கு கிடைத்தது.

    வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும், எந்த மத நடைமுறையிலும் எந்த வகையிலும் தலையிடவில்லை.

    இந்த மசோதாவில் சில முரண்பாடுகள் இருந்தன, எனவே அதைத் திருத்துவது அவசியம். எந்தவொரு இந்தியரும் வக்பு போர்டை உருவாக்க முடியும் என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன், ஆனால் 1995 இல் அப்படி இல்லை. 2013 இல், நீங்கள் அதில் மாற்றங்களைச் செய்தீர்கள், இப்போது 1995 ஆம் ஆண்டின் விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளோம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒருவர் மட்டுமே வக்பு போர்டை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்" என்று தெரிவித்தார். 

    • சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
    • விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முற்சிக்கின்றன.

    மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு "வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் முழுமையாக நிலையில் தயாராக உள்ளது. சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், அதன் விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முயல்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

    ரம்ஜான் விடுமுறை முடிவடைந்து நாளை பாராளுமன்றம் கூடுகிறது. இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக வேண்டுமென்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

    மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த மசோதா முதலில் மக்களவையில் அறிமுக்கப்படுத்தப்படும்.

    இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களுக்கு நலனுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    மக்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா முன்மொழியப்பட்டது. பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு திருத்தங்கள் செய்தது. திருத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையான இன்று இந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கருப்புப் பட்டை அணிய வேண்டும் என தூண்டுவது நாட்டிற்கு நல்லதல்ல.

    எதிர்க்கட்சிகள் இந்த மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, அரசுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும். என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளில் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ள பல எம்.பி.க்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளளனர்.

    இந்த மசோதா பெரும்பாலான முஸ்லிம்களின் நலத்திற்கானது. வக்ஃபு வாரிய சொத்துகளை சுய நலத்திற்காக சுரண்டும் சில தலைவர்களுக்கு எதிரானது. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இவ்வா கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
    • ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    புதுடெல்லி :

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.

    மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
    • ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

    நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    (பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.

    உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

    தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் பயன்படுத்தும் திட்டம் இல்லை. மேலும், இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

    20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 208 வழக்குகள் 20 ஆண்டுகளாக உள்ளன. ஐகோர்ட்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 547 வழக்குகளும், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்கோர்ட்டுகளில் 6 லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளும் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 343 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகபட்சமாக, ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,926 இந்திய கைதிகள் உள்ளனர்.

    அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அளிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    பாராளுமன்ற நிலைக்குழு அதற்கு சிபாரிசு செய்துள்ளது. இருப்பினும், 2019-2020 நிதிஆண்டில் பயணிகள் கட்டணத்தில் மத்திய அரசு ரூ.59 ஆயிரத்து 837 கோடி மானியம் அளித்துள்ளது. இது, ரெயிலில் செல்லும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 53 சதவித சலுகை அளிக்கப்பட்டதற்கு சமம்.

    அதுபோக, 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் ஆகியோருக்கு சலுகை கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார்.
    • சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பனாஜி :

    கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.

    சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

    அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.

    ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.

    மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும்.
    • ஆனால் வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து, லண்டன் நகரில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தது.

    இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தன்னை இளவரசராக அறிவித்துக் கொண்ட ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.

    இந்தியாவின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறி இருக்கிறார். அவர் தற்போது இந்தியாவை பிரிக்க மக்களைத் தூண்டிவிடும் வேலையை செய்துவருகிறார்.

    இந்தியாவின் மிக பிரபலம் வாய்ந்த மற்றும் அன்பு செலுத்தப்படுகிற மதிப்புமிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் என்னவென்றால் ஒரே இந்தியா, வளர்ச்சிக்கான இந்தியா என்பதே ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மற்றொரு டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால் வெளிநாட்டினருக்கு உண்மையில் ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது தெரியாது. அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது இந்திய எதிர்ப்பு பேச்சுகள், இந்தியாவின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    ×