என் மலர்
நீங்கள் தேடியது "Kiss"
- புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
- தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
- பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.
அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.
தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்பூரில் ஒரு இளம்ஜோடி ஓடும் பைக்கில் முத்தமழை பொழிந்த சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் ஒரு வாலிபர் பைக் ஓட்டுகிறார். அவர் சாலையை பார்க்காமல் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.
- 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
- முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.
ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்
- கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்
டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.
இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
- பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
- சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளனர்.
- அலுவலகத்தில் வைத்து இருவரும் முத்தமிட்டு கொண்டது பிரச்சனையை உருவாக்கியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கு சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளனர். இதனை லியூவின் மனைவி கண்டுபிடித்துள்ளார். பின்னர் நிறுவனத்தின் மேனேஜரிடம் இது தொடர்பாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க லியூ விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தபிறகு அலுவலகத்தில் வைத்து இருவரும் முத்தமிட்டு கொண்டது மீண்டும் பிரச்சனையை உருவாக்கியது.
பின்னர் நிறுவன விதிகளை மீறியதாக இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். . இதனையடுத்து, பணிநீக்கத்தை எதிர்த்து இருவரும் தனித்தனியாக சுமார் ₹3 லட்சம் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
- பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்றார்.
- சந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அனக்கா பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று அனக்காபள்ளி மாவட்டத்தில் உள்ள பரவாடா என்ற இடத்த்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனது வாகனத்தில் ஏறுவதற்காக சென்றார்.
அப்போது பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்றார். சந்திரபாபு நாயுடுவின் பாதுகாவலர்கள் பூச்செண்டு கொடுக்க வந்த பெண்ணை முதல் மந்திரியிடம் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு அந்தப் பெண்ணை விடுவிக்குமாறு தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது திடீரென சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த பெண் முத்தம் கொடுக்க பலமுறை முயற்சி செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு பணிவுடன் மறுப்பு தெரிவித்தார். பெண்ணை தனுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.
பூங்கொத்து கொடுத்த பெண் சந்திரபாபு நாயுடுவுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.
பெண் ஒருவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களை தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
- காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
இந்தியாவின் பிரபல பாடகர்களுள் ஒருவராக விளங்குபவர், உதித் நாராயன். 90ஸ் மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள உதித் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார். பின்னர் மிஸ்டர் ரோமியோ படத்தின் 'ரோமியோ ஆட்டம் போட்டால்', ரட்சகன் படத்தில் 'சோனியா சோனியா', ரன் படத்தில் 'காதல் பிசாசே', கில்லி படத்தில் 'கொக்கரக்கொ', யாரடி நீ மோகினி படத்தில் 'எங்கேயோ பார்த்த மயக்கம்', மதராசப்பட்டினம் படத்தில் 'வாம்மா துரையம்மா', குருவி படத்தில் 'தேன் தேன்', படிக்காதவன் படத்தில் 'ராங்கி ரங்கம்மா' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் பல பாடகர்கள், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இணை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அப்படி, உதித் நாராயணும் உலகளவில் பல நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் உதித் நாராயண், டிப் பார்சா பானி என்ற பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். மேடையின் அருகே இருக்கும் ரசிகர்கள், மேடை மேல் நிற்கும் பிரபலங்கள் அல்லது பாடகர்களிடம் செல்பி கேட்பது வழக்கம். அது போல, உதித்திடமும், ஒரு ரசிகை, செல்ஃபி கேட்டு அருகே வந்தார். அப்போது செல்பி எடுத்துக்கொண்டிருந்த அந்த ரசிகை உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
இதை எதிர்பார்க்காத உதித், அதிர்ச்சியாவார் என்று பார்த்தால், குஷியாக, தனது வாயுடன் வாய் வைத்து அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கத்தி உற்சாகப்படுத்தினர். அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே சென்று விட்டார். அந்த ரசிகை மட்டுமல்லாமல் பல ரசிகைகளுக்கு அவர் முத்தமிட்டார்.
இந்த வீடியோ சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது ஒரு பெரிய விவாதமே நடைப்பெற்று வருகிறது. உதித் நாராயண் போன்ற ஒரு சீனியர் பாடகரிடம் இது போன்ற ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை எனவும், உதித் நாராயண் தனது எல்லையை மீறிவிட்டார் எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பத்திற்கு உதித் நாராயண் சார்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.