என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KKRvRCB"

    • KKR-க்கு எதிரான போட்டியில் கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியின் 13 ஆவது ஓவரின் கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் கோலியின் கால்களில் விழுந்தார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.

    பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறி நுழைந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    விராட் கோலியின் கால்களில் ரசிகர் விழுவது இது முதல் முறையல்ல. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார். இப்போட்டியில் 8 ஓவரை ஆர்சிபி வீரர் ரசீக் சலாம் வீசினார். அந்த ஓவரில் சலாம் வீசிய வைட் பந்தை நரைன் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் பந்து படவில்லை. அதன்பின்பு அவர் பேட்டை கீழே இறக்கையில் தவறுதலாக பேட் ஸ்டம்ப்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தது.

    இதனால் நரைன் ஹிட் விக்கெட் ஆனார் என்று ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. நடுவர் நரைனுக்கு அவுட் கொடுக்கவில்லை.

    அந்த பந்தை நரைன் ஆடி முடிந்தபின்பு நடுவர் வைட் கொடுத்தார். பந்து வைட் என அறிவிக்கப்பட்டதால் ஹிட் விக்கெட் முறைப்படி நரைனுக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. 

    • முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்174 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் ஓவரை ஆர்சிபி அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார். ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

    • விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
    • ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரகானே சிறப்பாக விளையாடினார் ரகானே, சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். ரகானே அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார். நரைன் 44 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து ரிங்கு சிங் 12 ரன்கள் , ரசல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர்.

     ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, பில் சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

    • ரகானே அரைசதம் விளாசினர்.
    • குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.

    ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.

    4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.

    9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகானே விக்கெட் இழந்த பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரகுவன்ஷி ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்ற மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் 7 பந்தில் 6 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், ரசல் 3 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே எடுத்திருந்தது.

    7-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஓவர் (டெத் ஓவர்) என அழைக்கப்படும் கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆட கொல்கத்தா அணியில் வீரர்கள் இல்லாமல் போனது.

    லிவிங்ஸ்டன் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 4 ரன்களே கிடைத்தது. 18-வது ஓவரை ஹெசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் 10 ரன்கள் கிடைத்தது.

    19-வது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 22 பநதில் 30 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க 4 ரன்கள்தான் கிடைத்தது.

    கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 174 ரன்கள் அடித்துள்ளது. கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடித்தது.

    ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். குருணால் பாண்ட்யா 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யாஷ் தயால், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி விளையாடி வருகிறது.

    • கொல்கத்தா பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
    • ரகானே 26 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.

    ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.

    4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இதனால் ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.

    9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.

    • கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகமாகிறார்.
    • ஆர்சிபி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது.

    ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி 4 வேகபந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. 

    கொல்கத்தா அணி:-

    டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், அந்த்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

    ஆர்சிபி அணி:-

    விராட் கோலி, சால்ட், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரஷிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஹேசில்வுட், யாஷ் தயால்

    • கொல்கத்தா அணி ரகானே தலைமையில் களம் இறங்குகிறது.
    • ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.

    இன்றிரவு நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது மெகா ஏலத்துக்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய இரண்டு அணிகளுக்கும் ஒருசில போட்டிகள் தேவைப்படும். கொல்கத்தா அணி கேப்டனாக ரகானேவும் ஆர்சிபி அணி கேப்டனாக ரஜத் படிதாரும் உள்ளனர்.

    இந்த போட்டிக்கு வருண பகவான் வழியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இன்று கொல்கத்தாவில் பரவலாக மழை பெய்யும். அதுவும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    நேற்றிரவு கொல்கத்தா நகரில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை நிலவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இன்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    கொல்கத்தா அணி:-

    ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர், வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல், அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா

    ஆர்சிபி அணி;-

    ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.

    • டாஸ் வென்ற பெங்களுரு பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கொல்கத்தா 204 ரன்களை குவித்தது.

    கொல்கத்தா:

    16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரஹமதுல்லா குர்பாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய ரிங்கு சிங், ஷர்துல் தாக்குர் ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    குறிப்பாக, ஷர்துல் தாக்குர் 20 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரிங்கு சிங் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் 32 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதிரடியில் மிரட்டிய ஷர்துல் தாக்குர் 29 பந்தில் 3 சிச்கர், 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய கொல்கத்தா 200 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து விளையாடிய பெங்களூரு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசினார். கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 31 ரன்கள், ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர்.

    பெங்களூரு அணி சார்பில் வனிந்து ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். லாம்ரோர் 18 பந்தில் 3 சிச்கர் உள்பட 34 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பெங்களூரு அணி 179 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா 3வது வெற்றியைப் பதிவு செய்தது.

    கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சுயாஷ் சர்மா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×