search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koundas"

    • சிறுமி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்
    • எஸ்பி பரிந்துரைின் பேரில் மாவட்ட கலெக்டர் உததரவு

    கரூர், 

    கரூரில் சிறுமி பாலியல் குற்ற வழக்கில் கைதான, மூன்று நபர்கள். மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஆண்டு டிசம்பரில் பதிவு செய்யப் பட்ட, சிறுமி பாலியல் குற்ற வழக்கில், கரூரை சேர்ந்த சதீஷ்குமார், (வயது 32), சணப்பிரட்டியை சேர்ந்த மதன் (32), வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சதீஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும், குண்டர் காவல் சட்டத்தின் கீழ் கைது தடுப்பு செய்ய, எஸ்.பி., சுந்தரவதனம், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட, கலெக்டர் பிரபு சங்கர், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமார் உள்பட மூன்று பேருக்கும் அதற்கான, உத்தரவு நகலை, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.

    • தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்தது
    • மாவட்ட எஸ்.பி.பரிந்துரையின் பேரில், கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேட்டை சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (வயது 27). இவர், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன் பவித்ரன்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜெயமணிக்குமாரை கைது செய்தனர். மேலும் இவர், தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயமணிக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மனைவியை கொலை செய்தவர்
    • கலெக்டர் பரிந்துரை பேரில் நடவடிக்கை

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வெண்ணாவல்குடி கொத்தோட்டையன் குடியிருப்பில் உள்ள பாண்டியராஜன் (வயது 19) என்பவர், கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற நித்தியாவை (வயது 35) கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் மீது உள்ள பல்வேறு வழக்குகளின் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் உத்தரவின் படி குண்டர் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×