என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu Market"
- கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தை நடைபெற்றது.
- பொங்கல் சிறப்பு சந்தை இல்லாமல் சிறப்பாக செயல்படுத்த மாற்று ஏற்பாட்டுகள் மாவட்ட அதிகாரி சாந்தி தலைமையில் நடந்து வருகிறது.
சென்னை:
பொங்கல், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் சிறப்பு சந்தை செயல்படுத்தப்படும்.
இதற்கான டெண்டர் விடப்பட்டு அதை எடுத்தவர்கள் கடைகள் வைப்பதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவார்கள்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தை நடைபெற்றது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அயுத பூஜைக்கும் சிறப்பு சந்தை நடந்தது.
தற்போது பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, மஞ்சள் குலை, வியாபாரத்திற்கான பொருட்கள் போன்றவை விற்பனை செய்வதில் வியாபாரிகள் தீவிரமாக இருப்பார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு லாரியில் இருந்தவாறே கட்டுக்கட்டாக மொத்தமாக விற்பனை செய்வார்கள்.
ஆனால் இந்த பொங்கலுக்கு சிறப்பு சந்தை நடத்தப்படவில்லை. அதற்கான டெண்டர் அழைப்பு எதுவும் கோரப்படவில்லை என்று மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாட்டின் மூலம் பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கடந்த முறை சிறப்பு சந்தை வியாபாரிகள் சாலையில் கடைகளை போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த முறை வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கரும்பு, மஞ்சள் குலை, வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
கரும்புகளை கொண்டு வரும் விவசாயிகள், வியாபாரிகள், விற்பனை செய்வதற்காக சிறு கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட உள்ளது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அதற்கேற்ப நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. பொங்கல் சிறப்பு சந்தை இல்லாமல் சிறப்பாக செயல்படுத்த மாற்று ஏற்பாட்டுகள் மாவட்ட அதிகாரி சாந்தி தலைமையில் நடந்து வருகிறது.
- ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
- முதல் நாளான இன்று கரும்பு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி சந்தை இன்று தொடங்கியது.
இன்று முதல் ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
முதல் நாளான இன்று கரும்பு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
- பண்டிகை நாளில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கலை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 17-ந்தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைந்து இருந்ததால் விலை அதிகரித்து இருந்தன.
- இன்று 550 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 550 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைந்து இருந்ததால் விலை அதிகரித்து இருந்தன. வெண்டைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதே போல் இன்று மொத்த விற்பனை கடைகளில் உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும் விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100 வரையும் உஜாலா கத்தரிக்காய் ரூ.70 வரையும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-
தக்காளி-ரூ.20, நாசிக் வெங்காயம்-ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.80, உருளைக்கிழங்கு-ரூ.17, கோலார் உருளைக்கிழங்கு-ரூ.32, உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, அவரைக்காய்-ரூ.50, பீன்ஸ்-ரூ. 35, வெள்ளரிக்காய்-ரூ.15, குடை மிளகாய்-ரூ.40, ஊட்டி கேரட் ரூ. 40, பீட்ரூட்-ரூ.20, முட்டைகோஸ்-ரூ.7, முள்ளங்கி -ரூ.12, புடலங்காய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.30, சவ்சவ்-ரூ.7, காலி பிளவர் ஒன்று-ரூ.20.
- மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் ஏராளமானோரை கண்டுபிடித்து அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.
- சோதனையின் போது மார்க்கெட் பகுதியில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் அடிக்கடி மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
மேலும் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளையும் தாக்கி வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதேபோல் மார்க்கெட் வளாகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கூட்டுறவு ஊழியரிடம் 'லிப்ட்' கேட்டு ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அவரது 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு மார்க்கெட் வளாகத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டான்.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மார்க்கெட் வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பைக் திருட்டு, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலையும் போலீசார் மார்க்கெட் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளின் மொட்டை மாடி, கழிப்பறை மாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏறி ஆய்வு செய்து தீவிர சோதனை நடத்தினர்.
இன்று அதிகாலை 2-வது நாளாக போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் தவிர்த்து மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் ஏராளமானோரை கண்டுபிடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நடமாட்டம் பற்றி தகவல் தெரிந்தால் வியாபாரிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து இதுபோன்று சோதனை நடத்தப்படும் என்றனர்.
- கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.
- வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 64 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.
கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை அதிகரித்து ரூ.30-க்கு விற்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக விவசாய தொழிலாளர்கள் தக்காளி அறுவடை செய்வதற்கு அதிகளவில் செல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. தற்போது தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இன்று காலை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.
மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி லோடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
- இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
இன்று 20 லாரிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட தர்பூசணியை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தர்பூசணி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தர்பூசணி உற்பத்தி 2 மடங்காக அதிகரித்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் தர்பூசணி விலை கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாகர்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
தற்போது ஒரு கிலோ பலாப்பழம் ரகத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.
தற்போது 400 முதல் 500 எண்ணிக்கையில் மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.
- காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது.
சென்னை:
வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை களை கட்டத்தொடங்கி உள்ளது.
காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.
காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக 25 ரோஜா பூக்களை காம்புடன் கட்டி அதை அழகுபடுத்தி பூங்கொத்தாக விற்பனை செய்ய குவித்து வைத்துள்ளனர். இந்த ஒரு கட்டு ரோஜாவின் விலை இன்று ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது நாளை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூவியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா கூறியதாவது:-
ரோஜா பூ விற்பனை இன்று வரை சூடுபிடிக்க ஆரம்பிக்கவில்லை. நாளை முதல் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் 2 நாட்களுக்கு ரோஜா பூக்கள் அதிகமாக ஓசூரில் இருந்து வந்திறங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது. டீசர்ட்டுகளில் காதலர் சின்னம் வரைந்தும், செயின், கம்மல், பர்ஸ், பேனா ஆகியவைகளில் காதலர் சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனையாகிறது அதை ஆர்வமுடன் இளசுகள் வாங்கிச் செல்கின்றனர்.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
போரூர்:
ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் பார்ஷி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை மொத்த சந்தையில் கிலோ ரூ.1-க்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இதில் லாரி வாடகை, சுமை கூலி உள்ளிட்ட செலவுகள் போக அவருக்கு கிடைத்தது ரூ.2-மட்டுமே. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு இதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினசரி 40 லாரிகள் வரை வெங்காயம் வருவது வழக்கம். தற்போது வெங்காய சீசன் தொடங்கி பரவலாக விளைச்சல் அதிகரித்து இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் வெங்காயம் விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.6 முதல் விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.10 முதல் விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது.
- நீண்ட காலமாக இருந்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.
- கழிப்பிடங்களில் கழிவறைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பூ, பழம் மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவதால் தினமும் சென்னையை சுற்றியுள்ள பகுதி வியாபாரிகள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் நேரடியாக சென்று காய்கறி, பழங்கள் வாங்குகின்றனர். மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்ற புகார் இருந்தது.
நீண்ட காலமாக இருந்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்திடம் வலியுறுத்திய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து சீர்செய்யப்படவில்லை, கழிப்பிட, குடிநீர் வசதி போன்றவை செய்து தர வேண்டும் லைசென்சு பெறாமல் சிலர் கடை நடத்தி வருவதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக கடைகளை அமைத்து இடையூறு செய்வதாகவும் அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி அதிகாரி சாந்தி கூறியதாவது:
மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. சர்வீஸ் சாலை சரி செய்யப்படுகிறது. பூ மார்க்கெட்டில் குளம் சீரமைக்கப்படுகிறது. கழிப்பிடங்களில் கழிவறைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்றி வருகிறோம். தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் நவீனப்படுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பச்சை காய்கறிகள் வரத்து சந்தைக்கு வருவது குறைந்து உள்ளது.
- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று 46 லாரிகளில் தக்காளி, 45 லாரிகளில் வெங்காயம் உட்பட மொத்தம் 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பச்சை காய்கறிகள் வரத்து சந்தைக்கு வருவது குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய பச்சை காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.70 வரை விற்பனை ஆனது. தக்காளி ரூ.20-க்கும், வெங்காயம் கிலோ ரூ.10-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.15-க்கு, விற்கப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஆந்திராவில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
- மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் வரத்தும் உள்ளன.
சென்னை:
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நீர்ச்சத்துள்ள பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்ற சிறப்பு பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் வரத்தும் உள்ளன. கோடைகால பழங்களான தர்பூசணி, கிர்ணி உள்ளிட்டவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரத்தில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன.
மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரையிலும், ஆரஞ்சு ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், திராட்சை ரூ.40 முதல் ரூ.50-க்கும், தர்ப்பூசணி ரூ.15 முதல் 20-க்கும், கிர்ணி பழம் ரூ. 20 முதல் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.