என் மலர்
நீங்கள் தேடியது "Krishnamurthy"
- சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.
எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில் ஆளுனர் வஜுபாய் வாலா ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, 3 மாதங்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க தவறினால் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.
ஜனாதிபதி ஆட்சியே அனைத்திற்கும் தீர்வு என நான் குறிப்பிடவில்லை ஆனால் இதன்மூலம் அதிகப்படியான பண விரயம், நேர விரயம், குதிரை பேரம் போன்றவை தவிர்க்கப்படும்.
முதலில் தேர்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் முறையை மாற்ற வேண்டும். 33.33 சதவிகித வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும். யாராலும் 33.33 சதவிகித வாக்குகள் பெற இயலவில்லை என்றால் மீண்டும் அந்த தொகுதியில் தேர்தல் வைக்க வேண்டும்.
சில நாடுகளில் 50 சதவிகிதத்துக்கு கூடுதலாக 1 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகின்றனர். நாம் முதலில் 33.33 சதவிகிதம் என்ற முறைக்கு மாறுவோம் பின்னர் படிப்படியாக 50 சதவிகிதம் என்ற இலக்கை நிர்ணயிக்கலாம்.
ஆட்சி அமைப்பதற்காக கட்சி மாற கூடாது என்ற கட்டுப்பாட்டு சட்டத்தினை அரசியல்வாதிகளுக்கு விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Krishnamurthy #Prezrule