என் மலர்
நீங்கள் தேடியது "KT Rajendra Balaji"
- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார்.
- விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் உத்தரவு.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாததால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை என அதிப்தி தெரிவித்தது.
முன்னதாக,
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி நல்லதம்பி எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலக மக்களின் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என்பது பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒட்டு மொத்தப் பட்டாசுக்கான தேவையில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் இருந்து தான் தயாராகிச் செல்கிறது.
ஆனால் அவ்வப்போது இந்தத் தொழிலுக்கு சிலரால் இடையூறுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை தன்னம்பிக்கையுடன் போராடி இத்தொழிலை பட்டாசு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதுகாத்து வந்தனர். தற்போது பட்டாசால் மாசு ஏற்படுவதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தின் மூலம் இத்தொழிலை அழிக்க முனைந்துள்ளனர்.
இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதன் அவசியத்தை விரிவாக வலியுறுத்தினார்.
அத்துடன் நில்லாமல் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை தொடர்பு கொண்டு அ.தி.மு.க. எம்.பி.க்களோடு மத்திய அமைச்சர்களை சந்தித்து பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உத்தரவிட்டார். அதன்படி நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பட்டாசு தொழிலதிபர்களுடன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தொழிலை பாதுகாக்க கோரிக்கை மனுக்களை அளித்து வந்தோம்.
பட்டாசு தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை தமிழக முதல்வர் எடுத்து வருவதால் அவரை பட்டாசுதொழிலின் பாதுகாவலர் என்றே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் பட்டாசுத் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
அதுபோல இந்த மாநாட்டில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்குத் தடை கோருவது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளரைச் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
இங்கு வலியுறுத்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், பட்டாசு தொழிலதிபர்கள் அய்யன் அபிரூபன், பயோனியர் மகேஷ்வரன், சோனி கணேசன், ஆறுமுகா மாரியப்பன், காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன், லார்டு ஆசைத்தம்பி, சிவகாசி நகர செயலாளர் அசன்பத்ருதீன், ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன். சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கு பெற்றனர்.