என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuthukalvalasai"

    • கூட்டத்தில் 2023 - 24 ஆண்டிற்கான 15 ஆவது மத்திய நிதி குழு மானிய தொகைக்கு வேலை செய்ய தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களிடம் மினி டிராக்டர் மற்றும் 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத்தில் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023 - 24 ஆண்டிற்கான 15 ஆவது மத்திய நிதி குழு மானிய தொகை ரூ.39,96,795-க்கு வேலை செய்ய தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும் குத்துக்கல்வலசை ஊராட்சியை தூய்மையான கிராமமாக மாற்ற வழங்கப்பட்ட மினி டிராக்டர் மற்றும் 6 பேட்டரி வாகனங்களை தலைவர் சத்யராஜ் துப்புரவு பணியா ளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலை செல்வி, சங்கரம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன்,மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா மற்றும் செயலர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×