என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K.Veeramani"

    • எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார்.
    • முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், அறக்கட்டளை நிறுவனர் கணேசன் ஆகியோர் சிலை திறப்பு விழா மற்றும் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி தலைமை அறங்காவலர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவல சிவானந்தம், நிதி அரங்கம் கர்ணன், அறங்காவலர்கள் சண்முகம், பொம்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளி தாளாளர் கலியமூர்த்தி வரவேற்று பேசினார்.

    பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள அறக்கட்டளை யின் நிறுவனர் கணேசன் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முருகானந்தம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று நிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அணைக்கரை கோகிலாம்பாள் கல்வி நிறுவனங்கள் தலைவர் அன்பழகன், பாபநாசம் பெனிபிட்பண்ட் தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன், அறங்கா வலர்கள் ஜெயராமன், குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் காளிதாசன் நன்றி கூறினார்.

    முன்னதாக தி.க. தலைவர் வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    திராவிட மாடல் அரசுக்கு போட்டி அரசாங்கத்தை கவர்னர் செய்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக தான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார். முதல்வரின் அதிகாரத்தில் கவர்னர் தலையிட எந்த உரிமையும் இல்லை. முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். அந்த உரிமையில் தலையிட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது என்று கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். #KVeeramani
    கும்பகோணம்:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர்.


    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மோடி சொல்வதையெல்லாம் கேட்டு செயல்படுகிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததால் அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை ஏன் செய்யவில்லை.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். குருகுல கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது.

    பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் ஓராண்டுக்குள் அந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KVeeramani
    ×