என் மலர்
நீங்கள் தேடியது "Laapataa Ladies"
- உச்சநீதிமன்றத்தில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது.
- லாப்டா லேடீஸ் தயாரிப்பாளர், இயக்குநர் திரையிடலில் கலந்து கொள்ள உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை தலைமை நீதிபதிகள், அவர்களது குடும்பத்தார் மற்றும் அலுவலர்கள் கண்டுகளிக்க உள்ளனர். பாலின சமத்துவம் பேசும் இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தின் விசேஷ திரையிடலின் போது படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான அமீர் கான், இயக்குநர் கிரன் ராவ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளயாகி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடலில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த படம் இன்று மாலை 4.15 முதல் 6.20 மணி வரை திரையிடப்பட உள்ளது.
- இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் ஆவர்
- ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர்
இந்த வருட ஆஸ்கர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படம் லாபட்டா லேடிஸ். புதிதாகத் திருமணமான ஜோடிகளில் மணப்பெண்கள் தவறுதலாக இடம்மாறுவதால் ஏற்படும் குழப்பங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தை தயாரித்தவர்களுள் பாலிவுட் நடிகர் அமீர் கானும் ஒருவர். இந்திய திரைப்பட கூட்டமைப்பு (FFI) ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்து தயாரித்துள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "இந்திய பெண்கள் ஆதிக்கமும் அடிபணுவும் கலந்த வினோதமான கலவை" ["strange mix of submission and dominance"]என்ற வரியுடன் அந்த ஆவணம் தொடங்குகிறது. இதை பிரதிபலிப்பதாலேயே இந்த படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளோம் என்ற அர்த்தத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதால் இணையவாசிகள் அதைக் குறித்து தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் என்பதால் அவர்களின் மனப்பான்மை இதில் வெளிப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். இந்த ஆவணத்தை ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர். இந்த படத்தில் பெண்கள் வீட்டு வேலையை செய்து கொண்டு இல்லத்தரசியாக இருக்கவும் விரும்புவர் அதே வேலையில் அதற்கு நேர்மாறாகவும் இருக்க விரும்புவர் என்ற கருத்தியல் இடம்பெற்றிருப்பதால் குழு உறுப்பினர்கள் அவ்வாறு எழுதியுள்ளதாகவும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் படத்தை அனுப்ப முடிவு.
- இந்தி படம் என்பதற்காகவே லாபட்டா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டு.
ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களை பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்த பட்டியலில் தமிழில் மகாராஜா, தங்கலான், கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த விஷயத்தில், தமிழ் படங்களை வேண்டுமென்றே புறக்கணித்து, இந்தி படம் என்பதற்காகவே லாபட்டா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும்-கருத்தும்-தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்காக பட்டியலில் இருந்தும் இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது!"
"இந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை! என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம்."
"இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
- அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.
- இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களை பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை. எனினும், சர்வதேச இணை தயாரிப்பில் வெளியான இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.
"சிறந்த சர்வதேச திரைப்படம்" சந்தோஷ் திரைப்படம் சிறந்த சர்வதேச அம்சத்திற்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.