search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land Lease"

    • சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.
    • அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று கண்டிதன்பட்டு அருகே உள்ள உச்சுமான் சோலை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி ஏசுதாஸ் தலைமையில் பொதுமக்கள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கண்டிதன்பட்டு, காட்டூர், தென்னக்குடி, பரவக்கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 24 ஏழை மக்கள், மொழிப்போர் தியாகிகள், முன்னாள் ராணுவத்திற்கு உச்சுமான்சோலை கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தலா 1 ஏக்கர் நிலம் பட்டாவுடன் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அவரிடம் இது குறித்து கேட்டதற்கு சரியான பதில் இல்லை.எனவே அந்த நபரிடமிருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×