என் மலர்
நீங்கள் தேடியது "Laptop"
- இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல் அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
இன்ஃபின்க்ஸ் நிறுவனத்தின் புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலில் 15.6 இன்ச் FHD ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், இண்டெல் செலரான் N5100 பிராசஸர், 8 ஜிபி +256 ஜிபி மற்றும் 8 ஜிபி + 512 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஐஸ் ஸ்டார்ம் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லேப்டாப் வெப்பமாவதை அதிகபட்சம் 4 டிகிரி வரை குறைக்கிறது. அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் 1.76 கிலோ எடை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 18.15mm அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பேக்லிட் கீபோர்டு, ஆண்டி கிளேர் கிளாஸ் டச்பேட் மற்றும் மல்டி டச் சப்போர்ட், 45 வாட் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் லேப்டாப்-ஐ ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ அம்சங்கள்:
15.6 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
1.1 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் செலரான் N5100 குவாட் கோர் பிராசஸர்
இண்டெல் UHD கிராஃபிக்ஸ்
8 ஜிபி ரேம்
256 ஜிபி / 512 ஜிபி எஸ்எஸ்டி
விண்டோஸ் 11 ஹோம் எடிஷன்
2MP FHD வெப்கேமரா
வைபை 5, ப்ளூடூத் 5.1
2x USB 3.0, 1x HDMI 1.4, 1x USB C
மைக்ரோ எஸ்டி ஸ்லாட்
3.5mm ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்
2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
40 வாட் ஹவர் பேட்டரி
45 வாட் பிடி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் சில்வர், புளூ மற்றும் கிரே என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்த 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர்.
- இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார்.
மனிதனின் ஆறாம் விரலாய் செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர். இதனால் குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போதும், சமையலறையில் செல்போன், லேப்டாப்பிற்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது எனலாம்.
இந்நிலையில் ஒரு தாய் தனது குடும்பத்தினரை செல்போன், லேப்டாப் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட வைப்பதற்காக மேற்கொண்ட புது 'டெக்னிக்' இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், லேப்டாப்பை அவரிடம் ஒப்படைத்த பிறகே அவர்களுக்கு தட்டில் சாப்பாடு போடுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாயின் டெக்னிக்கை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.
- M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் M2 சிப்செட் கொண்ட புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் புதிய மேக்புக் ஏர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஐமேக் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களும் M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடல்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. புதிய ஐமேக் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன் டிசைன் 2020 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யபபட்ட ஐமேக் மாடலில் M1 சிப்செட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் ஆப்பிள் நிறுவனம் M2 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மேக்புக் மாடல் இந்திய சந்தையிலும் கிடைக்கிறது.
- எல்ஜி நிறுவனம் தனது கிராம் சீரிஸ் லேப்டாப்களை அப்டேட் செய்து இருக்கிறது.
- 2023 கிராம் சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் உள்ளன.
எல்ஜி நிறுவனம் 2023 கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராம் சீரிஸ் மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அதிக விலை கொண்ட புதிய எல்ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கின்றன.
புதிய லேப்டாப்கள் எல்ஜி கிராம் 2023, கிராம் ஸ்டைல், கிராம் 2-இன்-1 மற்றும் எல்ஜி அல்ட்ரா பிசி என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ், SSD ஸ்டோரேஜ், அதிகபட்சம் 17 இன்ச் ஸ்கிரீன், 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி கிராம் 2023 சீரிஸ் அம்சங்கள்:
எல்ஜி கிராம் 2023 மாடலில் இன்டெல் EVO சான்று பெற்ற 13th Gen கோர் பிராசஸர், LPDDR5 6000 MHz ரேம், மற்றும் Gen.4 NVMe (x2) ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 16:10 WQXGA IPS ஸ்கிரீன் மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
எல்ஜி கிராம் ஸ்டைல் மாடல், அதன் பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் ஸ்டைலான லேப்டாப் ஆகும். இதில் 14 இன்ச் WQXGA+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி NVMe SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் டால்பி அட்மோஸ் சப்போர்ட், 72 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
எல்ஜி கிராம் 2-இன்-1 மாடலில் 16 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதனை லேப்டாப் மற்றும் டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 ரேம், 2 டிபி NVMe Gen4 SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
எல்ஜி அல்ட்ரா பிசி அதிக ரெசல்யூஷன் கொண்ட WUXGA டிஸ்ப்ளே, ஆன்டி கிளேர் IPS பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ், மெல்லிய பெசல்கள் உள்ளன. இந்த லேப்டாப் AMD ரைசன் 7000 சீரிஸ் பிராஸர், AMD ரேடியான் 7 கிராஃபிக்ஸ், 16 ஜிபி DDR4 ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 72 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:
எல்ஜி கிராம் 14 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம்
எல்ஜி கிராம் 16 இன்ச் மற்றும் 17 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் ஸ்டைல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் 2-இன்-1 துவக்க விலை ரூ. 2 லட்சத்து 05 ஆயிரம்
எல்ஜி அட்ரா பிசி துவக்க விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம்
- இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்குகிறது.
- ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்பி நிறுவனம் தனது என்வி சீரிஸ் லேப்டாப் மாடல்களில் புதிய வெர்ஷனை இணைத்துள்ளது. புதிய ஹெச்பி என்வி X360 15 லேப்டாப், இன்டெல் மற்றும் ஏஎம்டி என இருவித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லேப்டப்-இல் உள்ள டிஸ்ப்ளே, கணினிகளுக்காக முதல் முறை சான்று பெற்றுள்ளன.
புதிய ஹெச்பி என்வி X360 15 மாடலின் டாப் வேரியண்டில் IMX என்ஹான்ஸ்டு சான்று பெற்று இருக்கிறது. சந்தையில் இதுபோன்ற சான்று பெற்ற முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே, ஆஸ்பெக்ட் ரேஷியோவை நீட்டித்து வழங்குகிறது.

இத்துடன் IMAX தியட்ரிக்கல் சவுன்ட் மிக்ஸ் வசதி உள்ளது. இது டிடிஎஸ் X தொழில்நுட்பத்தின் விசேஷ டியூனிங்கை பயன்படுத்தி, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் டச் மற்றும் பென் இன்புட் வசதிகளை கொண்டுள்ளது.
தற்போது இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்கி வருகிறது. எனினும், ஹெச்பி இந்தியா ஒடிடி தளத்துடன் கூட்டணி தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது பயனர்கள் சிஸ்டத்தை விட்டு தூரமாக நடந்து சென்றதை கண்டறிந்து, தானாக லாக் செய்து விடும். பிறகு, பயனர்கள் லேப்டாப் அருகில் வருவதை உணர்ந்து, அதனை தானாக அன்லாக் செய்து விடும். ஹெச்பி பிரெசன்ஸ் 2.0 அம்சம் கொண்டு வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹெச்பி என்வி X360 15 அம்சங்கள்:
15.6 இன்ச் FHD+ OLED, 500-நிட்ஸ் HDR, IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே
5MP IR கேமரா, டூயல் மைக்ரோபோன்
பேங் &ஆல்ஃபுசன் டூயல் ஸ்பீக்கர்கள்
வைபை 6E, ப்ளூடூத் 5.3
4-செல் 55 வாட் ஹவர் லி-அயன் பாலிமர் பேட்டரி
65 வாட் அல்லது 90 வாட் அடாப்டர்
இன்டெல் கோர் i5-1335U i7-1355U பிராசஸர்
ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அல்லது NVIDIA GeForce RTX3050 GPU
8 ஜிபி, 16 ஜிபி LPDDR5 ரேம்
2 தன்டர்போல்ட் 4 போர்ட்கள்
ஏஎம்டி வேரியண்ட்
ஏம்டி ரைசன் 5 7530U அல்லது ஏஎம்டி ரைசன் 7 7730U பிராசஸர்
ஏஎம்டி ரேடியான் கிராஃபிக்ஸ்
8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்
10Gbps யுஎஸ்பி சி போர்ட்
விலை விவரங்கள்:
ஹெச்பி என்வி X360 15 2-இன்-1 லேப்டாப் விலை ரூ. 78 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் மற்றும் ஹெச்பி வொர்ல்டு ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இந்த லேப்டாப் நைட்ஃபால் பிளாக் மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹெச்பி என்வி லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்கள் என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- இந்தியாவில் என்ட்ரி லெவல் லேப்டாப்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
புதிதாக லேப்டாப் வாங்குவது சற்று சிக்கல் நிறைந்த ஒன்று. ஆனால், லேப்டாப்களில் தேர்வு செய்வதற்கு அதிக ஆப்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் லேப்டாப் மாடல்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களின் விலை லட்சங்களை கடந்துள்ளன.
அந்த வகையில், ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப, அனைத்து விலை பிரிவுகளிலும் அதிக லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவைகளில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்கள் எவை என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்த விலை பிரிவில் கிடைக்கும் மாடல்கள் கிட்டத்தட்ட சிறப்பான என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

ஹெச்பி குரோம்புக்
ஹெச்பி குரோம்புக் 15.6 மாடல் இந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறப்பான மாடல் ஆகும். டிஸ்ப்ளே மற்றும் வெப்கேமரா தவிர்த்து, இந்த மாடலின் அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதாகவே உள்ளது. இந்த லேப்டாப் இன்டெல் செலரான் V4500 பிராசஸர் கொண்டிருக்கிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 28 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

அசுஸ் விவோபுக் கோ 15
இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலில் சிறப்பான கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ்:
இந்த பட்டியலில் கிடைக்கும் ஸ்டைலிஷ் மாடலாக இந்த லேப்டாப் இருக்கிறது. 10th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 28 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது.

ஹெச்பி 255 G8
ஹெச்பி லேப்டாப் வாங்க திட்டமிடும் பட்சத்தில் இந்த மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் AMD ரைசன் 3 சீரிஸ் CPU, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பின் துவக்க விலை ரூ. 29 ஆயிரத்து 990 ஆகும்.

லெனோவோ ஐடியாபேட் 1
11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன், இந்த பட்டியலில் சிறிய லேப்டாப் மாடலாக லெனோவோ ஐடியாபேட் 1 இருக்கிறது. சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் இந்த லேப்டாப் அன்றாட பணிகளுக்கு ஏற்றது ஆகும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் சூட், 4 ஜிபி ரேம், 256 ஜிபி SSD மற்றும் வின்டோஸ் 11 ஒஎஸ் உள்ளது. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 25 ஆயிரத்து 289 என்று துவங்குகிறது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
- அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.
புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- லெனோவோ நிறுவனம் தனது யோகாபுக் 9i மாடலை முதன்முதலில் 2023 CES-இல் அறிவித்தது.
- புதிய யோகாபுக் 9i மாடலில் டூயல் டச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய யோகாபுக் 9i மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2023-இல் அறிவிக்கப்பட்ட யோகாபுக் 9i மாடல் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய லெனோவோ யோகாபுக் 9i மாடலில் இன்டெல் இவோ பிளாட்ஃபார்ம், புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் இரண்டு 13.3 இன்ச் 2.8K OLED பியூர்சைட் டிஸ்ப்ளே, டால்பி விஷன் HDR சப்போர்ட் உள்ளது. இதில் உள்ள டூயல் ஸ்கிரீன் தொழில்நுட்பம் லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட் என தேவைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. மெல்லிய டிசைன் கொண்டிருப்பதால், இந்த லேப்டாப் எங்கும் பயன்படுத்தலாம்.

லெனோவோ யோகாபுக் 9i அம்சங்கள்:
2x 13.3-இன்ச் 2.8K OLED டச் ஸ்கிரீன், 400 நிட்ஸ் பிரைட்னஸ்
13th Gen இன்டெல் கோர் i7-1355U பிராசஸர்
இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்
16 ஜிபி LPDDR5X ரேம்
1 டிபி PCIe Gen 4 SSD
வின்டோஸ் 11 / வின்டோஸ் 11 ப்ரோ
2x2 வாட் + 2x1 வாட் போவர்ஸ்&வில்கின்ஸ் ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ் சப்போர்ட்
FHD IR+ RGB வெப்கேமரா
பேஸ் பென் 4.0, ஃபோலியோ ஸ்டான்ட், ப்ளூடூத் கீபோர்டு
3x USB C போர்ட்கள், ப்ளூடூத் 5.2, வைபை 6E
80 வாட் ஹவர் பேட்டரி
விலை மற்றும் முன்பதிவு விவரங்கள்:
லெனோவோ யோகாபுக் 9i மாடல் டைடல் டியல் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் முன்பதிவு லெனோவோ வலைதளம் மற்றும் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
- ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.
ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.

ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோபுக் அம்சங்கள்:
11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே
மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஜியோ ஒஎஸ்
2MP HD வெப் கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இன்பினிட்டி கீபோர்டு
ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை
I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்
ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்
4000 எம்ஏஹெச் பேட்டரி
8 மணி நேரத்திற்கு பேக்கப்
இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.
- ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- புதிய ஹெச்பி லேப்டாப் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஹெச்பி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லேப்டாப் மாடலை- டிராகன்பிளை G4 என்ற பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹெச்பி லேப்டாப் எடை ஒரு கிலோவுக்கும் கீழ் உள்ளது. இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், பெரிய டச்பேட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேக்லிட் பிரைட்னஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப்பில் 13.5 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே, டச் ஸ்கிரன் மற்றும் OLED ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய லேப்டப் அதிகபட்சம் 32 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 5MP கேமரா வழங்கப்படுகிறது.
புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் விலை ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்லேட் புளூ மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்தியாவில் கணினி இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
- நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டும்.
லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் லேப்டாப் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என கடந்த வியாழன் கிழமை அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்புக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் தற்போதுள்ள சாதனங்களை அக்டோபர் 31-ம் தேதி வரை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

கணினி சார்ந்த சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சந்தையை சார்ந்து கட்டுப்பாடுகளை மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச சந்தையில் கணினி துறையில் முன்னணியில் விளங்கி வரும் ஆப்பிள், டெல் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. இதுதவிர உற்பத்தியில் சீனாவுடனான போட்டியை எதிர்கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று தெரிகிறது.
- இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது.
- விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி:
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இப்படி இறக்குமதியாகும் லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களால் பாதுகாப்பு ஆபத்துக்கள் அதிகம் உள்ளதாகவும். இதன் மூலம் தனிநபர் குறித்த தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதி மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி லேப்டாப், டேப்லெட் மற்றும் சிலவகை கணினி உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அரசிடம் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும். இப்படி உரிமம் பெற்றால் மட்டுமே அந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு உரிமம் இல்லாமல் லேப்டாப் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைவான அளவிலேயே கம்யூட்டர் சாதன பொருட்கள் இறக்குமதியாகும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கம்ப்யூட்டர் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகி இருப்பதால் இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் இந்த பொருட்களின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வாரம் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் சுதந்திர தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கணினி பொருட்கள் விற்பனைக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. இதனால் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.