என் மலர்
நீங்கள் தேடியது "lemon"
- எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
- கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது.
போரூர்:
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானம், எலுமிச்சை சாறு, கரும்புசாறு குடித்தும் தர்பூசணி உள்ளிட்ட நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டும் வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150 வரை விற்பனை ஆகிறது. மேலும் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எலுமிச்சை அதிகளவில் உற்பத்தி நடந்து வரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலை மேலும் உயரும் என்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தன. இதனால் பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து இன்று கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, அவரைக்காய்-ரூ.10, வரி கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.20 க்கு விற்பனை ஆனது.
- கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரூர்:
கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.
- வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது.
- கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை குறையாது.
திருச்சி:
தமிழகத்தில் கோடை வெயில் அனல் பறக்கிறது. இதில் உடல் வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது. நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், லெமன் டீ போன்ற வற்றுக்கு எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது எளிய மக்களின் தேர்வாகவும் எலு மிச்சை உள்ளது. தற்போது இதன் தேவை அதிகரித்து விளைச்சல் குறைந்துள்ள காரணத்தினால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எலு மிச்சை பழங்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.2-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது விலை உயர்ந்து முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.8-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து எலுமிச்சை பழம் விற்பனை செய்யும் வியாபா ரிகள் கூறுகையில், பெரம்ப லூருக்கு அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் இருந்து எலுமிச்சை பழம் விற்ப னைக்கு வருகிறது. வெயில் காலத்திற்கு முன்பு குறைந்த விலையில் விற்பனை செய் யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கோடை வெயி லினால் வரத்து குறைவாலும், தேவை அதிகமானதாலும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எண் ணிக்கை அடிப்படையில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்றனர்.
மணப்பாறை காமராஜர் மார்க்கெட் காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நாகூர் கனி கூறியதாவது:-
மணப்பாறை காமராஜர் மார்க்கெட்டுக்கு வையம் பட்டி, துவரங்குறிச்சி, விராலி மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தினமும் இங்கு 200 மூட்டை எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஒரு மூட்டை 50 கிலோ எடை இருக்கும். இங்கு வரும் 200 முட்டை எலுமிச்சை பழங்க ளில் 80 சதவீதம் உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது.
மீதமுள்ளவை ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதி களில் கடும் வறட்சி நிலவி வருவதால் விளைச்சல் சரிந்து உள்ளது. ஆகவே மார்க்கெட் டுக்கு 50, 60 மூட்டை எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மூட்டை எலு மிச்சை பழம் ரூ. 2000 முதல் 2500க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 7000 வரை ஏலம் போகிறது. இதனால் சில்லறை கடைக ளில் ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 12 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நன்னாரி சர்பத்தின் விலையும் பல இடங்களில் 20 லிருந்து ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.
- உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.
- செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.
முக மற்றும் வெளிபுற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடலில் உள்ள உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள்பகுதிகளில் கருமை காணப்படும், அதுவும் உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.
இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம். இதற்கு செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது சிலநாட்கள் மட்டுமே பலன் கொடுக்கும். நிரந்தரமான தீர்வு என்பது இல்லாமலே போய்விடுகிறது.
நாம் நமது வீட்டிலேயே எளிய முறையில் கருமையை நீக்க ஒரு சில டிப்ஸ்களை பார்ப்போம்.
* பச்சை பயறை நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்ந்து கருமையாக உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் கருமை நீங்குவதுடன் நிரந்தர தீர்வு காணலாம்.

* கற்றாழையை தோல்களை நீக்கிவிட்டு அதன் ஜெல் பகுதியை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். தினமும் இரவு நேரங்களில் அக்குள், கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் தேய்த்து வர 15 நாட்களில் நல்ல மாற்றம் உங்களுக்கு தெரியும்.

* தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து தேய்த்து வர ஒரு வாரங்களில் கருமை நீங்குவதை உங்களால் உணர முடியும்.
* உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சாரை எடுத்து தொடையின் கருமையான பகுதிகளில் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்ந்து 30 நிமிடம் காத்திருப்பிக்கு பின் கழுவிவர கருமை விரைவில் நீங்கும்.
- துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.
- அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.
பழங்களில் எலுமிச்சை பழம் தான் வழிபாடுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.
பூஜைக்கு வாழைப் பழங்கள் வைக்கப்படுவது உண்டு.
ஆனாலும் இறைவன் சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களுக்கும் எலுமிச்சை பழம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
அம்மனுக்கு மலர் மாலைகள் அணிவிப்பர். தங்க மாலைகள் போடுவர்.
எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பதும் உண்டு.
திருஷ்டி சுற்றிப் போடுவது என்றால் எலுமிச்சம் பழம்தான்.
புதிய வாகனம் வாங்கும்போது பூஜை எல்லாம் செய்துவிட்டு அதன் சக்கரத்தின் அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதும் உண்டு.
ஆலயங்களில் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இப்போதும் உண்டு.
மேல் மலையனூரில் எலுமிச்சம் பழ வழிபாடு மிக அதிக அளவில் உள்ளது.
பதினொன்று, ஐம்பத்தொன்று, நூற்றியொன்று, ஆயிரத்தொன்று என்று எலுமிச்சை விளக்கேற்றிப் பலரும் வழிபடுவர்.
துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.
அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் அற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.
கொரோனா பாதித்தவர்களுக்கு வைட்டமின் சி, டி சத்து கொண்ட உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள சொல்கிறார்கள்.
எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
எனவே வீட்டில் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தி பூஜை செய்துவிட்டு அதை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய வைரஸ் பரவல் காலத்தில் எலுமிச்சம் பழம் அதிகம் தேவை.
- அழகை வெளிப்படுத்த சருமத்தை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
- முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
தற்போதைய உலகில் பெரும்பாலும் பெண்கள் அழகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எனவே அத்தகைய அழகை வெளிப்படுத்த சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் ஒரு சில பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.
ஆகவே அழகை வெளிப்படுத்த சருமத்தை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாக மாறுவதை காணலாம்.

கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்
- புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.
- மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது.
புதுச்சேரி:
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. ஆராய்ச்சியின் மூலம் கனகாம்பரம் பூவில் பல 100 வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். இதற்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 32) எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார். ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.
காய்க்காத மிளகு செடிகளை காய்க்க வைப்பதற்காக இயற்கை முறையிலான கரைசல் ஊக்கியை கண்டுபிடித்தார். தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார்.
இது குறித்து இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி, கூறியதாவது:-
விவசாயத்தில் புதிய தொழில் முறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதன் அடிப்படையில் ஏற்கனவே நான் குறைந்த பருவத்தில் அதிக விளைச்சல் தர கூடிய மிளகு இனத்தை கண்டுபிடித்தேன். பொதுவாக மிளகு இனத்தில் நட்ட 7-வது ஆண்டில் தான் மகசூல் கிடைக்கும். அதுவும் 25 அடியை தொட வேண்டும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது. 15 அடியே போதுமானது.
இப்போது அதேபோன்று 15 அடியில் விளைச்சல் தர கூடிய புதிய மிளகு இனத்தை கண்டுபிடித்துள்ளேன். இதனுடைய காய்கள், இலைகளை சுவைத்தால் எலுமிச்சை நறுமணம் வரும். காரமும் சாதாரண மிளகு இனத்தை காட்டிலும் அதிக காரம் இருக்கும். சூரிய கதிர்வீச்சினால் மாற்றம் ஏற்பட்டு, இதனை கண்டுபிடித்துள்ளேன் என்றார்.
- ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம்.
- எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது.
உடுமலை
உடுமலை சுற்றுப்புற பகுதியில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது.ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம். செடிவகை சமதளபரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.நடவு செய்த நாளில் இருந்து 3- ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப்பிரச்சனையை தீர்க்கும் வல்லமை பெற்றது.அதுமட்டுமின்றி வயிற்று உபாதைகள், நெஞ்சு எரிச்சல், வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் சிறந்த கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.
மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது.இதனால் பொதுமக்களும் எலுமிச்சையை விரும்பி உணவில் பயன்படுத்தி வருவதால் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்னவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின்போது பூஜை செய்த எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வந்தது.
விழாவின் முதல் 9 நாட்கள், முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது தினசரி ஒன்று வீதம் மொத்தம் 9 எலுமிச்சம் பழங்களை குத்தி வைப்பார்கள். பின்னர் அந்த பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து பூஜை செய்வார்கள். இந்த பழச்சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவின் 11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12.45 மணி வரை இடும்பன் பூஜை நடைபெற்றது. அப்போது இடும்பன் சாமிக்கு கருவாடுசோறு படையல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் 9 எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தலைவர் பாலகிருஷ்ணன், மரத்தினால் செய்யப்பட்ட ஆணி செருப்பில் நின்றபடி இந்த எலுமிச்சம் பழங்களை ஏலம் விட்டார்.
இதனை ஏலம் எடுப்பதற்காக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, புதுச்சேரி, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான குழந்தையில்லாத தம்பதியினர் கோவிலுக்கு வந்திருந்தனர். அதுபோல் வியாபாரிகள், வீடு கட்ட முயற்சி செய்பவர்கள், தொழில் செய்ய முனைவோர்களும் வந்திருந்தனர்.
ஏலம் தொடங்கியவுடன் முருகனின் வேலில் திருவிழாவின் முதல் நாளன்று குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் ஏலத்தொகை உயர்ந்து கொண்டே போனது.
முடிவில் அந்த எலுமிச்சம் பழத்தை விழுப்புரத்தை சேர்ந்த ஜனார்த்தனன்- வெனிஷா தம்பதியினர் அதிகபட்ச தொகையாக ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.
இதேபோல் 2-ம் நாள் திருவிழாவின்போது வேலில் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு- பானுப்பிரியா தம்பதியினர் ரூ.22 ஆயிரத்துக்கும், 3-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்- சசிகலா தம்பதியினர் ரூ.19 ஆயிரத்துக்கும், 4-ம் நாள் பழத்தை பெங்களூரு ஆனந்தன்- சத்யா தம்பதியினர் ரூ.8 ஆயிரத்து 100-க்கும், 5-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுளாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி- சூர்யா தம்பதியினர் ரூ.16 ஆயிரத்துக்கும், 6-ம் நாள் பழத்தை மண்டகமேடு கிராமத்தை சேர்ந்த ரத்தினம்-தேவி தம்பதியினர் ரூ.10 ஆயிரத்துக்கும், 7-ம் நாள் பழத்தை திருமுண்டீச்சரத்தை சேர்ந்த முத்துராஜ் ரூ.21 ஆயிரத்துக்கும், 8-ம் நாள் பழத்தை மேட்டுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன்- நித்யா தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும், 9-ம் நாள் பழத்தை பெங்களூரு அருகே உள்ள பெல்காம் காண்டேஸ்புரம் பகுதியை சேர்ந்த ராவ்சாகிப்- ரூபாதேவி தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தனர்.
இவர்களில் முத்துராஜ் மட்டும் தனக்கு திருமணம் நடைபெற வேண்டி எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளார். மற்றவர்கள் குழந்தை பேறுக்காக எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளனர். ஆக மொத்தம் 9 நாள் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் கடந்த ஆண்டுகளில் எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து வேண்டிய வரம் கிடைத்தவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கருவாடு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

* இதிலுள்ள லிமோனென் குடல், வயிறு, மார்பகம், நுரையீரல், வாய், சருமம் இவைகளில் ஏற்படும் புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.
* இதிலுள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் பைட்டோக்யூட்ரியன்ட் முகப்பரு ஏற்படுத்தும் கிருமியினை கொன்று சரும வீக்கத்தினை நீக்கும்.
ஹெஸ்பெரிடின் எனும் ப்ளேவருய்ட் ரத்தத்தில் சர்க்கரை அளவினையும், கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்துகின்றது. எலும்பின் தேய்மானத்தினைக் குறைக்கின்றது. அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது ரத்த கொதிப்பினை குறைக்கும்.
வைட்டமின் ‘சி’ சத்து சளி, ப்ளூ இவற்றினைத் துரத்தும். வளர்சிதை செயல்பாட்டினைத் துரிதப்படுத்துவதால் நீண்ட சோர்வு, உடல் வலி இவை நீங்கும். பித்தப்பையை காக்கும். ஜீரண உறுப்புகள் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.
* உள் வீக்கங்களைக் குறைக்கும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் கூட்டும்.
* சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கும்.
இவ்வளவும் அறிந்த பின் தினமும் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்வோம்.