என் மலர்
நீங்கள் தேடியது "Leoni"
- எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
- பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.
எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.
- ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும்.
- ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.
சென்னை அடுத்த மாங்காட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாங்காடு நகர தி.மு.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட செயலாளர் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் லியோனி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, விக்கிரவாண்டில இரண்டு கிழவிகள் டீக்கடையில் பேசிக்கொள்கிறார்கள். ஒரு கிழவி சொல்லுது, இதுவரைக்கும் விழுப்புரத்தில் வெள்ளம் வந்து கேள்விபட்டு இருக்கோமா? 65 வயது ஆகுது எனக்கு. இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில விழுப்புரத்துல வெள்ளம் வந்து ஆடு, மாடு எல்லாம் அடிச்சுட்டு போனத என் கண்ணால பார்த்ததே இல்லை. ஏன் ஆத்தா இப்படி நடக்குதுன்னு கேட்டது.
அதற்கு மற்றொரு கிழவி சொல்லிச்சு, என்னிக்கு இந்த பாழா போன பையலுங்க விக்கிரவாண்டில வந்து மாநாடை போட்டாங்களோ, அன்னிக்கு விளங்காமா போனதுதான் விழுப்புரம்-ன்னு சொன்னாங்க. நான் சொல்லல பா. இரண்டு கிழவிகள் பேசினதை ஒட்டுக்கிட்டேன் நான்.
அதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும். சாதாரணமா படிக்காதவங்க பேசிக்கிட்டு இருங்காங்க. எங்க ஊர்ல இப்படி ஒருத்தர் மாநாடு போட்டு வெள்ளத்தில எங்க ஊரு அழிஞ்சு போச்சுன்னு.
அந்த நடிகர் பேசுகிறார் மாநாட்டில், எங்கள் கட்சியினுடைய கொள்கையின் முன்னோடிகள் யார் தெரியுமா? வேகமாக ஓடிவந்து ஒரு பேப்பர் எடுத்து கொள்கைய ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.