என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "liquor-cannabis"
- மதுபானம்-கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டார்.
- தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்ற னர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். இதில் 2 பேரிடமும் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட நபர்கள் ஆரப்பாளையம் முருகன் மகன் விஸ்வநாதன் (வயது 19), புட்டுத்தோப்பு, செக்கடி தெரு தங்கராமன் மகன் கிஷோர் (19) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரம் வினோத், ஆனந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் சோதனையில் நாகமலை புதுக்கோட்டை பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்டி சாக்குடன் வந்த 2 பேர் சிக்கினர்.
பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது கர்நாடக மதுபாட்டில்கள் 96 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேலக்குயில்குடி, ஆதிசிவன் நகர் சிவபாண்டி (27), கிழக்கு தெரு பசும்பொன் (27) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்