என் மலர்
நீங்கள் தேடியது "Lokayukta Raid"
- பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
- கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.
இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.
இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
- லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று போபாலில் லோக் ஆயுக்தா சோதனையின் போது, போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் 40 கிலோ வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, போபால் அரேரா காலனியில் வசிக்கும் சவுரப் சர்மா என்பவர் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இவர் ம.பி. சாலை போக்குவரத்துத் துறை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டுதான் விஆர்எஸ் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றும் 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஷோபா, சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் உமேஷ், பிதார் மாவட்ட நீர்பாசன துறை பொறியாளர் ரவீந்திரன், பெலகாவி மாவட்டம் கானாபூர் தாசில்தார் பிரகாஷ் ஸ்ரீதர், தும்கூரில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ராஜூ, பெல்லாரி தாலுகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி லோகேஷ், உள்பட 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
- 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை குரூப் ஏ தலைமை பொறியாளர் டி.டி.நஞ்சுண்டப்பா, பெங்களூரு தரக்கட்டுப்பாடு மற்றும் தர உறுதி மற்றும் நெடுஞ்சாலை கிரேடு-1 பொறியாளர் எச்.பி.காலேஷப்பா, கோலார் உதவி நிர்வாக பொறியார் நாகராஜ், கலபுரகி திட்ட அமலாக்க பிரிவின் ஜெகநாத் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது.
- கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 8 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.
பெங்களூருவை சேர்ந்த அதிகாரி கல்லேசப்பா வீட்டில் ரூ.32 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம், ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்திற்கு தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுபோல், மின்வாரிய என்ஜினீயரான நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.
தாவணகெரேயை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான டாக்டர் நாகராஜிக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு நகை, பணம், வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருக்கிறது. இதுபோல், டாக்டர் ஜெகதீசுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், பாகல்கோட்டையை சேர்ந்த அரசுஅதிகாரி மல்லேஷ் என்ற மல்லப்பாவின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். விஜயாப்புராவை சேர்ந்த முதல்நிலை ஊழியரான சிவானந்த சிவசங்கரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.சோதனைக்கு உள்ளான 8 அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.36 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 737 ஆகும். அவர்களது வீடுகளில் இருந்து ரூ.64 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 73 லட்சத்து 71 ஆயரத்திற்கு தங்க, வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.