என் மலர்
நீங்கள் தேடியது "LSG"
- நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது.
- சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியது.
இந்நிலையில், ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த பயனர்கள், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
A player of such calibre KL Rahul needing to bear the wrath of the team owner on field in national media is depressing to say the least ! #pathetic
— Mahi (@mahiban4u) May 8, 2024
U guys are disappointed - we get it ! Talk it out in a team meeting behind closed doors fgs !
pic.twitter.com/H0xSbPnQ55
- கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
- கடைசி 2 போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி மோசமான தோல்வியை தழுவியது.
- அந்த போட்டி முடிந்த பிறகு கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் கடுமையாக சாடினார்.
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் கடைசி 2 போட்டிகளில் கேஎல் ராகுல் தான் கேப்டனாக செயல்படுவார் என்று லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லக்னோ அணி அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வருகிற 14-ந் தேதி மோதுகிறது. அதற்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. அந்த போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.
- உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை.
- களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கா செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போல் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு தற்போது காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
வீரர்களுக்கு மரியாதை உண்டு, உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கேமராக்களுக்கு முன்னால் நடந்தால்... அது வெட்கக்கேடான விஷயம். இதுபோன்ற உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை. களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இப்படி நடந்து கொண்டதன் மூலம் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடி ஏற்றி விடவில்லை என்றார்.
- நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
- நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார்.
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின.
அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 460 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது
- லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
- இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.
அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
- 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளார்.
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
- 5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது.
- மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவை ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும்" என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
- 11 கோடி ரூபாய் வரை ஆர்.சி.பி. போட்டியிட்டது.
- பின்னர் ஐதராபாத் அணி போட்டியிட இறுதியாக எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
2025 ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அதிக விலைக்கு ஏலம் போவார் என கணிக்கப்பட்டது. அதன்படி அவரை எல்.எஸ்.ஜி. அவரை ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான அதிக தொகைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுத்தது.
ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் விடும்போது முதலில் எல்.எஸ்.ஜி. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறிமாறி கேட்டன. அதிக பணம் வைத்திருந்த ஆர்.சி.பி. எப்படியும் ரிஷப் பண்ட்-ஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆர்.சி.பி. 11 கோடி ரூபாய் வரை கேட்டது. அதன்பின் கேட்கவில்லை. பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எல்.எஸ்.ஜி.யுடன் போட்டியிட்டது. 20.75 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. கேட்டது. அப்போது டெல்லி அணி ஆர்.டி.எம்.-ஐ பயன்படுத்த முடிவு செய்தது.
பின்னர் எல்.எஸ்.ஜி. அணி 27 கோடி ரூபாய் நிர்ணயித்தது. அதற்கு டெல்லி தயாராக இல்லை. இதனால் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. அணியால் எடுக்கப்பட்டார்.
எல்.எஸ்.ஜி.-க்கும் ஆர்.சி.பி.க்கும் இடையில் ஏலம் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது ரிஷப் பண்ட்-ஐ எடுத்துவிடுவோம் என்ற கணிப்பில் குட்டி ஸ்பைடர்மேன் பறப்பபோது போன்ற அனிமேஷன் படத்தை வெளியிட்டு "சின்னசாமிக்கு செல்லும் வழியில், ஒருவேளை?" என ஆர்.சி.பி. டுவீட் செய்திருந்தது.
ஏலம் எடுத்த பின் "Sorry, Kid" மீம் மூலம் எல்.எஸ்.ஜி. ட்ரோல் செய்துள்ளது.
நேற்றைய ஏலத்தின்போது ஆர்.சி.பி.யின் யுக்தியை கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுலை அவர்கள் கூடுதல் தொகை கொடுத்து எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
- ரிஷப் பண்ட்-க்கு சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி இடையே கடும் போட்டி நிலவியது.
- எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய் கொடுக்க டெல்லி ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவரை லக்னோ அணி இவ்வளவு தொகைக்கு எடுத்தது.
ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு மீண்டும் எடுக்க ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை டெல்லி அணி பயன்படுத்தியது. ஆனால் லக்னோ அணியின் ரூ.27 கோடி தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. இதனால் லக்னோ அணி இந்த தொகைக்கு எடுத்தது. அவர் லக்னோ அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது தொடர்பாக லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:-
ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்வது என்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பட்டியலில் இருந்ததால் அவருக்காக கோடிக்கணக்கில் வைத்து இருந்தோம். ரூ.27 கோடி என்று சற்று உயர்ந்து விட்டது. ஆனால் எங்களுக்கு அவர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ரிஷப் பண்ட் சிறந்த வீரர் மேட்ச் வின்னர் ஆவார். அவர் லக்னோ அணியில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதுவரை ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ வாங்கி வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
- கே.எல்.ராகுலுக்கு தகுதியான மரியாதையை கொடுப்போம் என்று டெல்லி உரிமையாளர் தெரிவித்தார்.
2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
இதனையடுத்து கே.எல்.ராகுல் குறித்து பேசிய டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல். ராகுல் ஒரு தரமான வீரர் என்று நான் நம்புகிறேன். அவரை குறிப்பிட்ட தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலத்தில் எடுத்தது மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு உதவியது. கே.எல். ராகுலை எனக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்.
அவர் அன்புடனும் மரியாதையுடனும் வளர்ந்துள்ளார். அவருக்குத் தகுதியான அன்பையும் மரியாதையையும் நான் கொடுக்கப் போகிறேன். அவர் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதை விமர்சிக்கும் தொனியில் டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.