என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LTTE"

    • பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
    • 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என்று சீமான் பதில்

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய சீமான், "பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.

    15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது. இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காட்ட சொல்லுங்கள். 15 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சீமான் கேட்டுள்ளார். அதுவே ஒரு ஆதாரம் என்று தான் எடுத்து காட்டுகிறோம் அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து காட்ட முடியும்.

    அந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்யப்பட்டது என்று டெமோ காட்ட சொல்கிறார். இணையத்தில் ஒரு படம் இப்படி தான் எடிட் செய்யப்படுகிறது என்று டெமோ காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு தனியாக நான் ஒரு டெமோ காட்டவேண்டுமா?

    பிரபாகரனை பொய் என்று நான் சொல்லிவிட்டதாக சீமான் சொல்கிறார். பிரபாகரன் தான் உண்மையான தலைவர் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் வந்து நான் சொன்னது உண்மையா பொய்யா என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையே முடிந்திருக்கும். அவரை ஏன் பேசவிடாமல் தடுக்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.

    • இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
    • உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தார்கள்.

    இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.

    2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.

    இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது. பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

    பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால் பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, "எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது" என்றார். இதனால் பிரபாகரன் மீண்டும் உயிரோடு வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ஈழ தமிழ் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

    • பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.

    சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.



    இதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இலங்கையில் ஈழத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்பட்டதால் அவர்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு உரிமைக்காக ஆயுதம் ஏந்தும் போராட்டம் தொடங்கியது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது.

    சிங்கள ராணுவத்தினரை குறி வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அந்த இயக்கத்தில் இருந்த இளைஞர்கள் சுதந்திர தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் மாய்த்து கொண்டனர். அந்த வகையில் 18 ஆயிரத்து 742 பேர் மாவீரர்களாக மாறி உள்ளனர்.

    ஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது. 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை இருந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. இந்தியா போன்று அமெரிக்கா, மலேசியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்பட 32 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதித்து உள்ளது.

    இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலுமாக இலங்கை ராணுவம் தோற்கடித்தது. அதன் பிறகு விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது விடுதலைப்புலிகள் பெயரில் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.

    என்றாலும் இந்தியாவில் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள தடை விரைவில் முடிய உள்ளது.



    இதையடுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டிப்பு செய்து இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க முயற்சிகள் நடக்கிறது. அதன் ஆதரவு இயக்கங்களுடன் சேர்ந்து இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது ஆயுதம் ஏந்துவதை கைவிட்டு இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது.

    கனடாவிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தியாவில் முன் எச்சரிக்கை காரணமாக விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய விடுதலைப் புலி 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
    பெர்லின்:

    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் (73).

    இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி கொழும்பில் உள்ள தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

    இதற்கிடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது. அதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெர்மனியில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    லட்சுமண் கதிர்காமர் கொல்லப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

    ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்கும் படத்திற்கு `சீறும் புலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SeerumPuli #BobbySimha
    தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 4 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

    சீறும் புலி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
    இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பாபி சிம்ஹா, பிரபாகரன் தோற்றத்தில் இருக்கும் அந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #SeerumPuli #VeluPrabhakaran #BobbySimha

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் வேலு பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார். #VeluPrabhakaran #BobbySimha
    தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

    இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.



    சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

    இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. #VeluPrabhakaran #BobbySimha

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #Vaiko #LTTE
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

    அந்த தீர்ப்பாயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி, விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து, தடையை நீட்டிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.

    இதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.



    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அப்போது மத்திய அரசு வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Vaiko #LTTE
    இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினையை எழுப்புவோரை, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்துவதாக சமீபத்தில் பதவி விலகிய தமிழ் பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் கூறினார். #SriLanka #LTTE #Vijayakala
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மந்திரி சபையில் இருந்த ஒரே தமிழ் பெண் மந்திரியான விஜயகலா கடந்த வாரம் கொழும்புவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது அவர், ‘வடக்கு மாகாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிங்கள எம்.பி.க்கள், அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு கட்சித்தலைவரும், பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார். மேலும் விஜயகலாவின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என அட்டார்னி ஜெனரலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன், கடந்த 5-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    ராஜினாமா நடவடிக்கைக்குப்பின் முதல் முறையாக, வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் விஜயகலா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒருவர் பேசினால், அவரை விடுதலைப்புலியாக தெற்கு (சிங்களர்கள்) பார்க்கிறது. விடுதலைப்புலி ஆதரவாளராகவே அவர்களை முத்திரை குத்துகின்றனர். நான் வடக்கு மாகாண மக்களின் மனதில் இருப்பதைத்தான் பேசினேன். அவர்களுக்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்’ என்றார்.

    ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழர்களின் நிலை மேம்பட்டு இருப்பதாக கூறிய விஜயகலா, தனது முயற்சிகளுக்கு எதிர்ப்பு வந்தாலும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார். #SriLanka #LTTE #Vijayakala
    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.


    இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மந்திரி விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena #SrilankanMinister
    ×