என் மலர்
நீங்கள் தேடியது "Macron"
- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
- இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடையும் மேக்ரான் பல இடங்களை சுற்றி பார்க்க இருக்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில், இன்று இந்தியா வருகிறார்.
பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். இருவரும் இணைந்து சில வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட இருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட இருக்கிறார். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசிக்க உள்ளார்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் ரோடுஷோ நடத்த உள்ளனர்.
ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் இந்தியா வர இருக்கிறார்.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 21 பீரங்கி குண்டு முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி.
- முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
- குடியரசு தினவிழா முன்னிட்டு ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன.
- பிரான்ஸ் படைவீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார். தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்ற பிறகு, கண்கவர் அணிவகுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிர பவனில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடனிருந்தார்.
முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு
முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்டு இந்திய இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.
#WATCH | The tableau of Gujarat takes part in the #RepublicDay2024 parade. Theme of the tableau is 'Dhordo: Global Icon of Gujarat's Tourism Development'. pic.twitter.com/eGdywc9jYT
— ANI (@ANI) January 26, 2024
தேசியக்கொடியை பறக்கவிட்டபடி Mi-17IV ஹெலிகாப்டர்
நான்கு Mi-17IV ஹெலிகாப்டர்கள் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு வானில் சென்றன.
#WATCH | Four Mi-17IV helicopters in 'Dhwaj' formation at Kartavya Path on 75th Republic Day pic.twitter.com/5U7JObmje2
— ANI (@ANI) January 26, 2024
சக்ரா விருதுகள் வாங்கிய அதிகாரிகள் அணிவகுப்பு
மிக உயர்ந்த வீர வீருதுகளான பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற அதிகாரிகள் அணிவகுபபு நடைபெற்றது.
#WATCH | Delhi | The winners of the highest gallantry awards including Param Vir Chakra and Ashok Chakra on the Kartavya Path, as the March Past begins.#RepublicDay2024 pic.twitter.com/qPWrcjae2U
— ANI (@ANI) January 26, 2024
குதிரைப்படை அணிவகுப்பு
#WATCH | March past by the Army Mounted Columns begins.The first Army contingent leading the Mechanised Column is of 61 Cavalry, led by Major Yashdeep Ahlawat. Raised in 1953, the 61 Cavalry is the only serving active Horsed Cavalry Regiment in the world, with the amalgamation… pic.twitter.com/OIfxMdmua9
— ANI (@ANI) January 26, 2024
பிரான்ஸ் வீரர்கள் அணிவகுப்பு
#WATCH | The French Foreign Legion music band consisting of 30 musicians and the French marching contingent from the 2nd Infantry Regiment of the French Foreign Legion on Karvatya Path on 75th Republic DayAbove them are two Rafale fighter jets on Kartavya Path pic.twitter.com/WBkQTAl2aj
— ANI (@ANI) January 26, 2024
டி-90 பீஷ்மா டாங்கிகள் அணிவகுப்பு
#WATCH | Mechanised Columns of the Army take part in #RepublicDay2024 paradeThe detachment of Tank T-90 Bhishma, led by Lt Fayaz Singh Dhillon of 42 Armoured Regiment, at the Kartavya Path. pic.twitter.com/TFgSlaMOeh
— ANI (@ANI) January 26, 2024
பாதுகாப்புப்படையின் அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு
பீரங்கி படைப்பிரிவின் பினாகா படைப்பிரிவின் அணிவகுப்பு
பழமையான காலாட்படையின் மெட்ராஸ் படைப்பிரிவின் அணிவகுப்பு
முப்படையில் உள்ள வீராங்கனைகளின் அணிவகுப்பு
ஆயுதப்படை மருத்துவக்குழுவின் அனைத்து பெண்கள் பிரிவு அணிவகுப்பு
இந்திய விமானப்படை அணிவகுப்பு
முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் பாதுகாப்புப்படையின் இசைக்குழு
இந்திய விமாப்படையின் சிறப்பை விளக்கும் காட்சி வீடியோ
டெல்லி பெண் போலீசின் இசைக்குழு முதன்முறையாக பங்கேற்றது
பெண் அதிகாரித்தை பிரதிபலிக்கும் வகையில் பெண் வீராங்கனைகளின் அணிவகுப்பு
- ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
- 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.
பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.
அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
- இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
- அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:
இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலையையும் பார்வையிடுகிறார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களி டம் கூறுகையில், 'அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்கிறார்.
இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை (11-ந்தேதி) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டுக்கு அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.
இந்த உச்சி மாநாட்டில் அரசுத்துறை அதிகாரிகள், சிறு மற்றும் பெரு நிறுவ னங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் அதி காரிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை பிற்பகலில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அங்குள்ள போர் நினைவிடத்துக்கு செல்கிறார்கள். அங்கு முதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
பின்னர் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை அமைந்துள்ள கடாரச்சி பகுதியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்தியாவும் அதில் பங்குதாரராக உள்ளது.
அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு இந்தியாவின் துணை தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பின்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வருகிற 13-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று இரவு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. வருகிற 14-ந்தேதி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு அவர் நாடு திரும்புகிறார்.
டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.
இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.
கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests