என் மலர்
நீங்கள் தேடியது "Madivandi"
- அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடு துறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
- இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விரைவாக மிதிவண்டி இயக்குதல் போட்டி நடைபெற்றது.
இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியை சேர்ந்த 80மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 15வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரோஸ்லின்மேரி முதலிடம் பெற்று ரூ.5ஆயிரமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி ஷமினாராகவி 2-ம் இடம் பெற்று ரூ.3ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ் மூன்றாம் இடம் பெற்ற ரூ.2ஆயிரமும் பரிசுதொகையை பெற்றனர்.
மேலும் 15பேர் தலா ரூ.250பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வ ரிராஜசேகரன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுதொகையையும் வழங்கினார்.
இதில் நகர்மன்ற துணை தலைவர் ம.சுப்பராயன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவில் உதவி தலைமைஆசிரியரும், உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் நன்றிக்கூறினார்.