என் மலர்
நீங்கள் தேடியது "Magistrate"
- தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசை கைது செய்தனர்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 நபர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர். அப்போது கொள்ளை கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்ற மொட்டை விஜய் (19) எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருந்ததை பிடிக்க சென்றபோது போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை விஜய் அரிவாளால் வெட்டியதால் இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது தற்காப்புக்காகவும், சக போலீசாரை காப்பாற்றுவதற்காகவும் விஜயை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றார்.
இதனை தொடர்ந்து விஜயின் கூட்டாளிகளான புதுச்சேரி உழவக்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார் (21), அண்ணாதுரை மகன் அன்பரசு (20), திருபுவனத்தை சேர்ந்த முசுபூர் ரகுமான் மகன் ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசையும் (20) கைது செய்தனர். இதற்கிடையே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயின் உடலை நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அவரது உடலை வாங்க, புதுச்சேரியில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விஜயின் உடலை அடக்கம் செய்ய புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த2 நாட்களாக என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். என்கவுண்ட்டர் நடந்த எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முந்திரி தோப்பில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள், அரிவாள் மற்றும் போலீசார் சுட்டபோது வெளியான தோட்டா பாகங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் என்கவுண்ட்டர் நடந்த சம்பம் குறித்து போலீசார் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரிடம் தெரிவித்தனர். அதனை முழுமையாக கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முதுகுளத்தூரை சேர்ந்த கண்ணன் மகள் தீபிகா (வயது18). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும், கமுதி அருகே சீமனேந்தலை சேர்ந்தவரும், தற்போது பாம்பனில் வசித்து வரும் ராமன் மகன் வெற்றிவேலும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் 18 வயது தீபிகாவிற்கு பூர்த்தியடைந்ததையடுத்து, ஜூலை முதல் தேதியில் தீபிகா முதுகுளத்தூரில் தனது வீட்டிலிருந்து இரவு வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார்.
இதுகுறித்து தீபிகாவின் தாய் அமுதா தனது மகளை காணவில்லை என முதுகுளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் காதல் ஜோடிகள் தீபிகா -வெற்றிவேலை கண்டுபிடித்து, முதுகுளத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில வாரங்களே ஆனநிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மேலும் இருவரும் மேஜரான நிலையில் இருப்பதால் கவுன்சிலிங் முடிந்தபிறகு இருவரின் விருப்பபடி செல்லவும் உத்தரவிட்டார்.