search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Deepa Festival"

    • வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    • அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
    • கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    விழுப்புரம்:

    போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அவர்களின் பஸ் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கூடுதல் பஸ்கள் விழுப்புரம் மண்டலம் சார்பில் இயக்கப்பட உள்ளன.

    விழுப்புரம், திரு வண்ணாமலை வழித் தடத்தில் 317 பஸ்கள், திண்டிவனம், திருவண்ணாமலை வழித்தடத்தில் 82 பஸ்கள், புதுச்சேரி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 180 பஸ்கள், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழித்தடத்தில் 115 பஸ்கள், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கங்களை மேற்பார்வை செய்யவும் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×