என் மலர்
நீங்கள் தேடியது "Malaysia Open Badminton"
- மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
- பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர்.
கோலாலம்பூர்:
மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.
பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.
ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.
நாளைய ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய்,லக்ஷயா சென் காப் இறங்குகிறார்கள்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
- இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றனர்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்டின் முதல் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடியும் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் ஜோடியும் மோதின. இதில் 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.
- 2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.
- பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் மற்றும் கனடா வீரர் யாங் மோதினர்.
இந்த ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்தது. இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்துடன் சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இதில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சீன வீரர் நாளை இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ்.பிரணாய் உடன் மோதவுள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டும் மலேசிய வீராங்கனையான கோ ஜின் வெய்-ம் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்திய பெண்கள் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி,
தாய்லாந்தின் சுவாசாய்-ஜாங்சதாபாம்பான் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்த சுற்றில் இந்திய ஜோடி சீன ஜோடியுடன் மோதுகிறது.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
- முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக சென்றது. இந்த செட்டில் 23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.
இதனால் லி ஷிஃபெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் கேம்-ஐ கடுமையாக போராடி 26-24 எனக் கைப்பற்றியது.
- 2-வது கேமில் முதல் பாதியில் 8-11 என பின்னதங்கிய நிலையில், பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலோசியாவின் யெவ் சின் ஓங்- ஈ யி டெயோ-வை எதிர் கொண்டது.
இதில் முதல் கேமில் இரண்டு ஜோடிகளும் சிறப்பாக விளையாடியது. இறுதியில் இந்திய ஜோடி 26-24 என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றியது. 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் செட்டில் இந்திய ஜோடி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 18-16 என முன்னிலை கண்டிருந்தது. ஆனால் மலேசிய ஜோடி தொடர்ந்து மூன்று புள்ளிகள் பெற்று 19-19 என சமநிலைப் பெற்றது. அத்துடன் 20-19 என முன்னிலையும் பெற்றது.
அதன்பின் இந்திய ஜோடி வெற்றி பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்து நான்கு புள்ளிகளை பெற்று முதல் கேம்-ஐ கைப்பற்றியது.
2-வது கேமில் மலேசிய ஜோடி 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தது. அனத்பின் 17 புள்ளிகளில் இந்திய ஜோடி 13 புள்ளிகளை பெற்று 21-15 என கேமை கைப்பற்றி வெற்றி பெற்றது.
அரையிறுதியில் தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.
- சாத்விக்- சிராக் செட்டி ஜோடி வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.
- இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது.
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.
இதில் இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது. அதன்படி 21-10, 21-15 என வெற்றி பெற்று தென்கொரிய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் கிதாம்பி 22-18, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 11-ம் நிலை வீரரான கென்டோ மோமொட்டாவை எதிர்கொள்கிறார்.