என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maldives"

    • மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை நம்பி இருக்கிறது.
    • நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும்.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

    இது மாலத்தீவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கு முன்பு போல் சுற்றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது.

    இந்த நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராகிம் பைசல் கூறும்போது, எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம்.

    இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருக்குமாறு நான் கூற விரும்புகிறேன்.

    எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும் என்றார்.

    • மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.

    தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

     

    முன்னதாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

    போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந்த நிலையில்தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

     

    இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

     

    சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

    • சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.
    • அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

     உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருங்குடி மக்களால் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை மக்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

     

    குறிப்பாக மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை வெளியேற்றினார். சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது. இலங்கை உட்பட அண்டை நாடுகளை சீனாவின் பக்கம் செல்லாமல் தன் கைவசம் வைத்துக்கொள்ள ஆரம்பம் முதலே இந்தியா மெனக்கிட்டு வருகிறது. எனவே மாலத்தீவுடன் இணக்கத்தை ஏற்படுத்துவது இந்தியாவுக்கு இன்றியமையாததாகிறது.

     

    இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் முய்சு கலந்துகொண்டார். இந்த நிலையில்தான் மோடியின் இந்த பக்ரீத் வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, தியாகத்தாலும் சகோதரதத்துவதாலும் இந்த திருநாள் உருவானது. ஒரு இணக்கமாக உறவை கட்டமைப்பதற்கும் சகோதரத்துவமும் தியாகமும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளார். 

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று மாலத்தீவுக்கு செல்கிறார்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.

    இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஜெய்சங்கரின் பயணம் நோக்கமாக உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும் என்று தெரிவித்தது. ஜெய்சங்கர் தனது பயணத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    மேலும் மாலத்தீவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலத்தீவில் அதிபராக பதவியேற்றவுடன் முகமது முய்சு தனது நாட்டில் உள்ள இந்திய படைகளை வெளியேற உத்தரவிட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.

    இதையடுத்து இந்திய எதிர்ப்பு நிலையை அதிபர் முகமது முய்சு கைவிட்டார். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
    • மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.

    இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.

    இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
    • அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.

    இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்தார். மேலும், அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    • நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
    • இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

    நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.

    பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.

    மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.
    • மாலத்தீவுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு என்றார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்.

    புதுடெல்லி:

    மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில், அப்துல்லா கலீல் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இதுதொடர்பாக அப்துல்லா கலீல் கூறுகையில், இந்தியா-மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருக்கிறார் என தெரிவித்தார்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளோம். மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது என தெரிவித்தார்.

    • வெளியுறவுத்துறைக்கு மொத்தமாக ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இரண்டாவதாக நேபாளத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளியுறவுத்துறைக்கு மொத்தமாக ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதில் ரூ.5,483 கோடி பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை குறைந்துள்ளது.

    2025-26 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில் அண்டை நாடான பூடானுக்கு அதிகபட்சமாக ரூ.2,150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாவதாக நேபாளத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மாலத்தீவுக்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக இலங்கைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டில் வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    • 2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தது.
    • 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைவு.

    சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகை தருகின்றனர்.

    இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்த நாடுகள் பட்டியலில் 2023-ல் முதலிடம் வகித்த மாலத்தீவு, கடந்த ஆண்டு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தாலும் சீனா முதல் இடத்தையும், ரஷியா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 2025-ல் 3 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை மாலத்தீவு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தவும், கிரிக்கெட் முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

    அத்துடன், முதல் முறையாக இந்திய ஊடகங்களில் விளம்பரம் செய்ய ஒரு பிராண்ட் தூதரை நியமிக்க இலக்கு வைத்துள்ளதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்றுக்குப் பிறகு 2020-ல் இருந்து 2023 வரை இந்தியாவில் இருந்து ஏராளமானோர் மாலத்தீவிற்கு வருகை தந்தனர்.

    இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை பதிவிட, இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவை புறக்கணித்தனர்.

    இதன்விளைவாக 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

    வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதும் முதன் முதலில் அண்டை நாட்டுக்குத்தான் சென்றார். அதே போன்று இந்த தடவையும் பக்கத்து நாட்டுக்கே செல்ல வேண்டும் என்ற முடிவின்படி அவர் மாலத்தீவு செல்கிறார்.

    சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. அது தேர்தலில் ஓய்ந்த பிறகு தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் சிலமணி நேரம் மட்டுமே மோடி தங்கி இருப்பார்.

    அப்போது அவர் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே இருவரையும் சந்தித்து பேசுவார். இது தவிர இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார்.


    இலங்கையில் சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து சுமார் 250 பேர்களை கொன்று குவித்தனர். இந்த கொடூரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குண்டு வெடிப்பு நடந்த ஏதாவது ஒரு இடத்துக்கு மோடி செல்வார் என்று தெரிகிறது.

    இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய விசாரணை குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். மோடியின் வருகைக்கு முன்னதாக அவர்கள் தங்களது விசாரணையை முடிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
    ×